இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஜெயா பட்டாச்சார்யா. இந்தி படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கொரோனா லாக்டவுனின்போது மொட்டை அடித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஜெயா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது,
நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காதல் முறிவுக்கு பிறகு என் முடியை ஷார்ட்டாக வெட்டினேன். நான் அழகாக இருந்தும் ஏன் தனியாக இருக்கிறேன் என்று பலரும் கேட்டது எரிச்சலாக இருந்தது. அதன் பிறகே முடியை வெட்டினேன்.
நான் லுக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. என் மகன் போன்ற நடிகர் அங்கித் பத்லா என் முடியை நீளமாக வளர்க்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு முடியை வளர்த்தேன்.
எனக்கு விலங்குகள் என்றால் பிடிக்கும். நான் வசிக்கும் பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக உணவளிக்கிறேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதுகாப்பு மற்றும் சுத்தம் முக்கியம். நீளமான முடி இருப்பதால் கஷ்டமாக இருந்தது.
நான் ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வெளியே சென்று நாய்களுக்கு உணவளிக்கிறேன். மேலும் ஊரடங்கால் கஷ்டப்பட்டும் ஏழைகளுக்கும் உணவு கொடுக்கிறேன். நான் ஒவ்வொரு முறை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் தலைக்கு குளிக்க வேண்டியதாக இருந்தது. நீளமான முடியை வைத்துக் கொண்டு அடிக்கடி குளிக்க கஷ்டமாக இருந்தது.
ஒரு நாள் நான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் தும்மினேன். என் தந்தைக்கு 90 வயதாகிறது. அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பால் இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தேன். முடிக்காக யாருக்கும் உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை.
இதையடுத்தே மொட்டையடித்தேன். அப்படியே முடி தேவைப்பட்டாலும் என்னிடம் இரண்டு விக் உள்ளது என்றார்.
இது குறித்து ஜெயா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது,
நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காதல் முறிவுக்கு பிறகு என் முடியை ஷார்ட்டாக வெட்டினேன். நான் அழகாக இருந்தும் ஏன் தனியாக இருக்கிறேன் என்று பலரும் கேட்டது எரிச்சலாக இருந்தது. அதன் பிறகே முடியை வெட்டினேன்.
நான் லுக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. என் மகன் போன்ற நடிகர் அங்கித் பத்லா என் முடியை நீளமாக வளர்க்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு முடியை வளர்த்தேன்.
எனக்கு விலங்குகள் என்றால் பிடிக்கும். நான் வசிக்கும் பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக உணவளிக்கிறேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதுகாப்பு மற்றும் சுத்தம் முக்கியம். நீளமான முடி இருப்பதால் கஷ்டமாக இருந்தது.
நான் ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வெளியே சென்று நாய்களுக்கு உணவளிக்கிறேன். மேலும் ஊரடங்கால் கஷ்டப்பட்டும் ஏழைகளுக்கும் உணவு கொடுக்கிறேன். நான் ஒவ்வொரு முறை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் தலைக்கு குளிக்க வேண்டியதாக இருந்தது. நீளமான முடியை வைத்துக் கொண்டு அடிக்கடி குளிக்க கஷ்டமாக இருந்தது.
ஒரு நாள் நான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் தும்மினேன். என் தந்தைக்கு 90 வயதாகிறது. அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பால் இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தேன். முடிக்காக யாருக்கும் உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை.
இதையடுத்தே மொட்டையடித்தேன். அப்படியே முடி தேவைப்பட்டாலும் என்னிடம் இரண்டு விக் உள்ளது என்றார்.