பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு காதலி ரியா சக்ரபர்த்தி போதைப் பொருளை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுஷாந்துக்கு தெரியாமலேயே ரியா அவ்வப்போது தண்ணீர், உணவில் போதைப் பொருளை கலந்து கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று கூறி அவருக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
சுஷாந்துக்கு போதைப் பொருள் கொடுத்தது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் கங்கனா சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் பார்ட்டிகள் பற்றி கங்கனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான் என் கெரியரை மட்டும் அல்ல உயிரையும் பணயம் வைத்துள்ளேன். சுஷாந்துக்கு சில டர்ட்டி ரகசியங்கள் தெரிந்திருக்கிறது அதனால் தான் அவரை கொலை செய்துவிட்டார்கள்.
திரைத்துறையில் மிகவும் பிரபலமான போதை வஸ்து கொக்கைன். அனைத்து பார்ட்டிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது. அது மிகவும் விலை உயர்ந்தது ஆகும். ஆரம்பத்தில் பெரிய ஆட்களின் வீடுகளுக்கு சென்றால் இலவசமாகவே கொடுப்பார்கள். எம்டிஎம்ஏ கிரிஸ்டல்களை நீரில் கலப்பார்கள். சில சமயம் நமக்கே தெரியாமல் நமக்கு கொடுத்துவிடுவார்கள்.
எனக்கு தெரியமால் என் மென்டர்(mentor)எனக்கு ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து கொடுத்தபோது நான் ஒரு மைனர். என்னை போலீசாரிடம் செல்லவிடாமல் தடுக்க அப்படி செய்தார். நான் வெற்றிகரமான நடிகையான பிறகு மிகவும் பிரபலமான பார்ட்டிகளுக்கு சென்றேன். அங்கு அதிரிச்சியூட்டும் விஷயங்களை கண்டேன்.
போதை தடுப்புப் பிரிவு பாலிவுட்டிக்குள் நுழைந்தால் பல முன்னணி பிரபலங்கள் சிறையில் தான் இருப்பார்கள். ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும். பிரதமர் ஸ்வச் பாரத் மிஷன் மூலம் புல்லிவுட் எனும் சாக்கடையை சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரியா சகர்பர்த்தி பற்றி சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தந்தை கிருஷ்ண குமார் சிங் கூறியிருப்பதாவது,
ரியா என் மகன் சுஷாந்துக்கு பல காலமாக விஷம் கொடுத்து வந்துள்ளார். சுஷாந்தை கொலை செய்தது ரியா தான். ரியாவையும், அவரின் கூட்டாளிகளையும் உடனே கைது செய்து அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டை கொல்ல ஸ்கெட்ச் போட்டது இந்த 2 'டேடி' தான்
சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று கூறி அவருக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
சுஷாந்துக்கு போதைப் பொருள் கொடுத்தது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் கங்கனா சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் பார்ட்டிகள் பற்றி கங்கனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான் என் கெரியரை மட்டும் அல்ல உயிரையும் பணயம் வைத்துள்ளேன். சுஷாந்துக்கு சில டர்ட்டி ரகசியங்கள் தெரிந்திருக்கிறது அதனால் தான் அவரை கொலை செய்துவிட்டார்கள்.
திரைத்துறையில் மிகவும் பிரபலமான போதை வஸ்து கொக்கைன். அனைத்து பார்ட்டிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது. அது மிகவும் விலை உயர்ந்தது ஆகும். ஆரம்பத்தில் பெரிய ஆட்களின் வீடுகளுக்கு சென்றால் இலவசமாகவே கொடுப்பார்கள். எம்டிஎம்ஏ கிரிஸ்டல்களை நீரில் கலப்பார்கள். சில சமயம் நமக்கே தெரியாமல் நமக்கு கொடுத்துவிடுவார்கள்.
எனக்கு தெரியமால் என் மென்டர்(mentor)எனக்கு ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து கொடுத்தபோது நான் ஒரு மைனர். என்னை போலீசாரிடம் செல்லவிடாமல் தடுக்க அப்படி செய்தார். நான் வெற்றிகரமான நடிகையான பிறகு மிகவும் பிரபலமான பார்ட்டிகளுக்கு சென்றேன். அங்கு அதிரிச்சியூட்டும் விஷயங்களை கண்டேன்.
போதை தடுப்புப் பிரிவு பாலிவுட்டிக்குள் நுழைந்தால் பல முன்னணி பிரபலங்கள் சிறையில் தான் இருப்பார்கள். ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும். பிரதமர் ஸ்வச் பாரத் மிஷன் மூலம் புல்லிவுட் எனும் சாக்கடையை சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரியா சகர்பர்த்தி பற்றி சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தந்தை கிருஷ்ண குமார் சிங் கூறியிருப்பதாவது,
ரியா என் மகன் சுஷாந்துக்கு பல காலமாக விஷம் கொடுத்து வந்துள்ளார். சுஷாந்தை கொலை செய்தது ரியா தான். ரியாவையும், அவரின் கூட்டாளிகளையும் உடனே கைது செய்து அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டை கொல்ல ஸ்கெட்ச் போட்டது இந்த 2 'டேடி' தான்