ஆப்நகரம்

லேட்டா கிடைத்த ஆம்புலன்ஸ்: பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த நடிகை!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை பூஜா ஜுன்ஜாருக்கு சரியான தருணத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2019, 9:24 am
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம் நடிகை பூஜா ஜுன்ஜார். ஒரு சில மராட்டிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பூஜா கன்ஜாருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Pooja  Zunjar


இதன் காரணமாக, கோரேகானில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொஞ்ச நேரத்திலேயே குழந்தை பிறந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சில நிமிடங்களில் குழந்தை உயிரிழந்தது.

சிறிது நேரத்திலேயே பூஜா ஜுன்ஜாரின் உடல் நிலையும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, ஹிங்கோலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அப்போதைக்கு அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பல இடங்களில் தேடி ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது.

எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பூஜா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்