ஆப்நகரம்

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நடிகையை கத்தியால் குத்திய நபர்

திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் நடிகை மால்வி மல்ஹோத்ராவை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

Samayam Tamil 27 Oct 2020, 2:21 pm
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டின் ஒண்டிக்கு ஒண்டி படத்தில் நடித்தவர் மால்வி மல்ஹோத்ரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள மால்வி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் கஃபேவுக்கு மால்வி நேற்று இரவு சென்றிருக்கிறார். அப்பொழுது சொகுசு காரில் வந்த நபர் மால்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
Samayam Tamil malvi malhotra


இதில் காயம் அடைந்த மால்வியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மால்வியை குத்திவிட்டு ஓடியவர் யோகேஷ் குமார் மஹிபால் சிங் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் யோகேஷ் குமாரை தேடி வருகிறார்கள். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மால்வி மல்ஹோத்ரா துபாயில் இருந்து திரும்பி வந்த மறுநாள் தாக்குதல் நடந்துள்ளது. இரவு 9 மணி அளவில் வெர்சோவாவில் இருக்கும் கஃபேவுக்கு மால்வி சென்றபோது கத்திக் குத்து நடந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மால்வி மல்ஹோத்ரா போலீசாரிடம் கூறியதாவது,

எனக்கு யோகேஷ் குமாரை கடந்த ஓராண்டு காலமாக தெரியும். நாங்கள் நண்பர்களாக இருந்தோம். யோகேஷ் குமார் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் நான் முடியாது என்று கூறினேன். மேலும் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

அவ்டி காரில் வந்த யோகேஷ் குமார் என்னை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு, ஏன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டார். நான் அவர் பேச்சை கேட்காததால் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார் என்றார்.

அரசியலில் குதித்த சர்ச்சை நடிகை: எடுத்ததுமே துணை தலைவி பதவி

அடுத்த செய்தி

டிரெண்டிங்