ஆப்நகரம்

என் கார் மீது விழுந்த பாறை தலை மேல் விழுந்திருந்தா? : மெட்ரோ நிர்வாகத்தை விளாசிய நடிகை

பாலிவுட் நடிகை மவுனி ராய் சென்ற கார் மீது மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு பாறை வந்து விழுந்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 4:44 pm
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Samayam Tamil mouni roy


இந்நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காரில் சென்றுள்ளார். அவரின் வாகனம் மும்பை ஜுஹு சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு பாறை வந்து காரில் விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கார் கண்ணாடி உடைந்ததை வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,

யாராவது சாலையை கடக்கும்போது பாறை விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். மும்பை மெட்ரோவின் பொறுப்பில்லாத செயலுக்கு என்ன செய்வது என்று யாராவது ஆலோசனை வழங்கலாமே என்று மவுனி ராய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



மவுனி ராயின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

உங்களுக்கு நடந்தது கொடுமை தான். உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும். நீங்கள் திரையுலக பிரபலம் என்பதால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். பொது மக்கள் மெட்ரோவில் பயணம் செய்ய நீங்க இதை கூட பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்று தான் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை மெட்ரோ சேவையை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் மவுனி ராய் இப்படி விளாசியுள்ளார்.

மவுனி ராய் தற்போது தான் நடித்த மேட் இன் சீனா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் அவர் மொகுல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ரன்பிர் கபூர், ஆலியா பட் சேர்ந்து நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்