ஆப்நகரம்

வெறும் நான்கு நாள் உடையுடன் வெளிநாட்டில் சிக்கிகொண்ட மௌனி ராய்

இந்தியா திரும்ப முடியாமல் கொரோனா லாக் டவுனில் அபு தாபியில் சிக்கிக்கொண்டதாக நடிகை மௌனி ராய் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 May 2020, 3:30 pm
நாகினி சீரியல் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை மௌனி ராய். அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. டிவி அதிகம் பார்க்காத இளைஞர்கள் கூட அது சீரியலை அதிகம் பார்த்தனர். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் நாகினி சீரியல் மூலமாக பிரபலம் ஆனார் மௌனி ராய்.
Samayam Tamil Mouni Roy


சீரியலுக்கு பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய மௌனி ராய் 2018ல் வெளிவந்த கோல்டு படத்தின் மூலமாக ஹீரோயினாக களமிறங்கினர். அதற்கு பிறகு கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அதன் பின் ரோமியோ அக்பர் வால்டர், மேட் இன் சைனா போன்ற படங்களில் நடித்துள்ளார் ஆவர்.

கொரோனா லாக்டவுன் துவங்குவதற்க்கு முன்பு மார்ச் மாதத்தில் UAEக்கு சென்றுள்ளார். அங்கு அபு தாபியில் ஒரு மாத இதழிற்காக போட்டோ ஷூட் நடைபெறவிருந்தது. 4 நாட்கள் மட்டுமே அங்கு ஷூட்டிங் என்பதால் அதற்கு மட்டும் தாயராக சென்றிருக்கிறார் அவர். அது முடிந்ததும் அங்கேயே தனது சகோதரியுடன் துபாயில் வீட்டில் தங்கினாராம் அவர்.

அவரது அடுத்த ப்ராஜெக்ட் ஏப்ரல் 15ம் தேதி தான் துவங்கவிருந்தது. அதனால் அங்கேயே இரண்டு வாரங்கள் தங்கி இருக்க முடிவு செய்தார் அவர். ஆனால் உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்து விடும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்தியாவில் முழுமையாக லாக்டவுன் போடப்பட்ட பிறகு அவரால் இங்கு திரும்ப இயலவில்லை.

வெறும் நான்கு நாட்களுக்கான உடைகளோடு அங்கேயே சிக்கிக்கொண்டார் மௌனி ராய். இது தொடர்பாக மௌனி ராய் அளித்துள்ள பேட்டியில் தான் அறியாமையில் எடுத்த முடிவால் இப்படி குடும்பத்தினை விட் டு பிரிந்து இருப்பதாக கூறியுள்ளார் அவர்.

"நான் அவர்கள் (குடும்பத்தினர்) எப்படி இருக்கிறார்கள் என தினமும் கேட்கிறேன். என் அம்மாவுடன் சகோதரர் தற்பட்டது இருக்கிறார் என்பதால் நான் சற்று நிம்மதி அடைகிறேன். மேலும் என் உறவினர்கள் சிலரும் அருகில் தான் வசிக்கிறார்கள். அதுவும் நன்மைக்கு தான்" என மௌனி ராய் கூறியுள்ளார்.

மும்பைக்கு திரும்பி வர மிக ஆவலாக காத்திருப்பதியாகி கூறியுள்ள அவர், எப்போது நிலைமை சகஜ நிலைக்கு திரும்பும் என காத்திருக்கிறாராம்.

View this post on Instagram What I thought were boomerangs 😃 (Both times)🤓 #selfentertainmentdayno? A post shared by mon (@imouniroy) on May 21, 2020 at 4:29am PDT

"கவலை மற்றும் அமைதி ஆகியவை தற்போது மாறி மாறி வருகிறது என கூறியுள்ளார் அவர், இந்த உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் மோசமான நேரத்தை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும், தற்போது ஆறுதலான விஷயம் என்னவென்றால் நான் தங்குவதற்கு ஒரு இடம் இருக்கிறது. ஒரு குடும்பம் இருக்கிறது. மீண்டும் இந்தியா திரும்புவதற்கு மிக ஆவலாக காத்திருக்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

அடுத்து மௌனி ராய் ப்ரம்மாஸ்த்ரா மற்றும் முகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்