ஆப்நகரம்

என் புருஷனுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு: மீடியா முன்பு சர்ச்சை நடிகை கண்ணீர்

Rakhi Sawant interview: தன் காதல் கணவர் ஆதில் துர்ரானிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 3 Feb 2023, 10:57 am
தன் கணவர் ஆதில் தனக்கு துரோகம் செய்வதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் ராக்கி சாவந்த்.
Samayam Tamil my husband adil durrani has extra marital affair rakhi sawant
என் புருஷனுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு: மீடியா முன்பு சர்ச்சை நடிகை கண்ணீர்


ராக்கி சாவந்த்

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். அவருக்கும், ஆதில் துர்ரானிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் கடந்த மாதம் தான் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார் ராக்கி. இந்நிலையில் தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறி செய்தியாளர்களிடம் கண்ணீர் வீட்டார் ராக்கி. தற்போது மேலும் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.



Rakhi Sawant: என் திருமண வாழ்க்கை பிரச்சனையில் இருக்கு: கதறி அழுத சர்ச்சை நடிகை

ஆதில்

ஜிம்மில் இருந்து வெளியே வந்த ராக்கி சாவந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, ஆதில் பாலிவுட்டில் பெரிய ஸ்டாராக விரும்பி என்னுடன் பழகியிருக்கிறார். என்னை பயன்படுத்தி சினிமா துறைக்கு வரப் பார்க்கிறார். தயவு செய்து ஆதிலை பேட்டி எடுக்க வேண்டாம். அவரை பெரிய ஸ்டாராக்கி விட முயற்சி செய்யாதீர்கள். அவர் ஜிம்முக்கு வர மாட்டார். பேட்டி கொடுக்க மட்டுமே இங்கு வருவார். அதை நான் விரும்பவில்லை என்றார்.

பேட்டி

View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani)

கள்ளத்தொடர்பு

ராக்கி மேலும் கூறியதாவது, என் கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. அந்த பெண்ணை பிளாக் செய்துவிடுகிறேன் என்று குர்ஆன் மீது சத்தியம் செய்தார். ஆனால் அந்த சத்தியத்தை காப்பாற்றவில்லை. அந்த பெண்ணிடம் ஆதில் பற்றிய அசிங்கமான ஆதாரங்கள் இருக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்து ஆதிலை மிரட்டுகிறார் என்றார்.

கோரிக்கை

செய்தியாளர்களிடம் ராக்கி சாவந்த் ஒரு கோரிக்கை விடுத்தார். தயவு செய்து ஆதிலை பேட்டி எடுக்காதீர்கள். உங்கள் காலில் விழுகிறேன் என்று கூறி அழுதார். ராக்கி தங்களின் காலை தொட வருவதை பார்த்த செய்திாளர்கள் பதறிப் போய், அய்யோ வேண்டாம் என்றார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கலாய்

ராக்கி சாவந்தின் வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, அம்மா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்ல. அதற்குள் ஜிம்முக்கு கிளம்பிவிட்டார். தன் திருமணத்தை பற்றி பேசி அழுகிறார். அம்மாவை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது மட்டும் சீன் போட்டாரே என்கிறார்கள்.

2வது திருமணம்

ராக்கி சாவந்துக்கு இது இரண்டாவது திருமணமாகும். முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபரான ரித்தேஷை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்தேஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அதுவரை ரித்தேஷின் முகத்தை யாருக்கும் காட்டவில்லை. திருமணத்தில் கூட தான் தனியாக இருந்த புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்