ஆப்நகரம்

ரூ 1.2 கோடி மோசடி: ஆரி பட நடிகர், மனைவி கைது

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் பிரசாந்த் நாராயணன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Sep 2019, 2:32 pm
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் பிரசாந்த் நாராயணன்(50). ஆரியின் நெடுஞ்சாலை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நான் தான் சிவா படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
Samayam Tamil nedunchaalai actor wife held in cheating case
ரூ 1.2 கோடி மோசடி: ஆரி பட நடிகர், மனைவி கைது


பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் பிரசாந்த். இந்நிலையில் பிரசாந்த் மற்றும் அவரின் மனைவி சோனா ஆகியோர் மும்பையில் வைத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் கேரளா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் பிரதாப் கூறியதாவது,

2017ஆம் ஆண்டில் வெளியான மலையாள படம் ஒன்றில் பிரசாந்த் நடித்திருந்தார். அந்த படத்தை தயாரித்த தாமஸ் பனிக்கர் என்பவர் தான் பிரசாந்த் மற்றும் அவரின் மனைவி சோனா மீது மோசடி புகார் தெரிவித்தார். அந்த படத்தில் நடித்த பிறகு பிரசாந்தும், தாமஸும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

என் மனைவியின் தந்தை மும்பையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் முதலீடு செய்தால் உங்களை இயக்குநர் ஆக்குவோம் என்று பிரசாந்த் தாமஸிடம் தெரிவித்தார். இதையடுத்து தாமஸ் அந்த நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி முதலீடு செய்தார். அதன் பிறகே அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து தாமஸ் போலீசில் புகார் அளித்தார்.

தாமஸின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து 7 பேர் அடங்கிய போலீஸ் குழு மும்பைக்கு சென்றது. அங்கு 3 நாட்களாக பிரசாந்தின் நடவடிக்கைகளை கவனித்து பின்னர் கைது செய்தோம். கைது செய்யப்பட்ட உடன் பிரசாந்த் மற்றும் அவரின் மனைவியை கேரளாவுக்கு அழைத்து வந்தோம் என்றார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரசாந்த், சோனா ஆகியோரை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் பிறந்து டெல்லியில் படித்த பிரசாந்த் மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார். அவர் இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்