ஆப்நகரம்

நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன், கைவிட்டுடாதீங்க: கணவருக்காக நடிகை கண்ணீர்

நடிகை ராக்கி சாவந்த் தன்னை கைவிட்டு விட வேண்டாம் என்று கணவரிடம் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2019, 3:16 pm
நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என்று வடிவேலு படத்தில் கூறியது போன்று நிஜத்தில் நானும் பாலிவுட் நடிகை தான் என்று கூறி வருபவர் ராக்கி சாவந்த்.
Samayam Tamil rakhi sawant


அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பின்னர் தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டார். தனக்கும், லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷுக்கும் ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமணம் நடந்ததாக ராக்கி தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் அழுதபடியே வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் அதன்படி செய்கிறேன். என்னை மட்டும் கைவிட்டுவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on Sep 20, 2019 at 7:25am PDT


வீடியோவை பார்த்தவர்கள் ராக்கி அழுவது மிகவும் செயற்கையாக உள்ளதே, இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். திருமணமாகிவிட்டது என்றால் கணவரின் புகைப்படத்தை ஏன் இதுவரை வெளியிடவில்லை. இது ராக்கியின் டிராமா, அவர் பேச்சை எல்லாம் நம்ப முடியாது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் ஹீரோயின்

இந்நிலையில் ராக்கி சாவந்த் குறித்து யூடியூப் பிரபலமான தீபக் கலால் குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார். ராக்கி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் தீபக் தெரிவித்துள்ளார். ராக்கி தீபக்கை தான் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அது நடக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் கணவருடன் மோதிய ஜெனிலியா: பப்ளிக், பப்ளிக் என்ற ரசிகர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்