ஆப்நகரம்

அக்காவை அடுத்து கணவரை பிரிந்த தங்கச்சி நடிகை

பிரபல நடிகை சாஹத் கன்னாவின் தங்கையும், நடிகையுமான சிம்ரன் கன்னா தனது கணவர் பரத் துதானியை பிரிந்துவிட்டார்.

Samayam Tamil 13 Apr 2020, 5:31 pm
ஏ ரிஷ்தா கியா கெஹ்லதா ஹை டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் சிம்ரன் கன்னா. அவருக்கும், கணவர் பரத் துதானிக்கும் இடையே பிரச்சனை என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தானும், பரத்தும் விவாகரத்து பெற்றுவிட்டதாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil simran khanna


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

விவாகரத்து பெற்றாலும் பரத் மீது எந்த கோபமும் இல்லை. மனமொத்து பிரிந்துவிட்டோம். எங்கள் மகன் வினீத் பரத்துடன் இருப்பான். நான் அடிக்கடி வினீத்தை சந்திப்பேன் என்றார்.

முன்னதாக சிம்ரனின் சகோதரியும், நடிகையுமான சாஹத் கன்னா தனது கணவர் ஃபர்ஹான் மிர்சாவை கடந்த 2018ம் ஆண்டு பிரிந்தார். ஃபர்ஹான் தன்னை உடலாலும், மனதாலும் டார்ச்சர் செய்ததாக கூறினார் சாஹத். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

சாஹத்தை அடுத்து சிம்ரனும் தனது கணவரை பிரிந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கிடையே சாஹத் கன்னா பாடகர் மிகா சிங்கை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்தவர்கள் சாஹத் கன்னா மிகாவை காதலிப்பதாக ஒரு முடிவுக்கே வந்துவிட்டனர். ஆனால் அந்த புகைப்படம் தங்களின் சிங்கிள் குவாரன்டைன் லவ் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று சாஹத் தெரிவித்துள்ளார்.


ஜான்வியின் வைரல் வீடியோ: இதை பார்க்க ஸ்ரீதேவி இல்லையேனு ரசிகர்கள் கவலை

அடுத்த செய்தி

டிரெண்டிங்