பாலிவுட்டில் சுமார் 40 ஆண்டுகளாக டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் சரோஜ் கான். அவருக்கு கடந்த மாதம் 20ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்படவே மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சரோஜ் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று நினைத்து பயந்தார்கள். ஆனால் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. கடந்த 20ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்த சரோஜ் கான் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
அவரின் மரண செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனையால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பாலிவுட்டில் தொடர் மரணமாக இருக்கிறது. நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான் ஆகியோர் புற்றுநோயால் இறந்தார்கள்.
அதன் பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சரோஜ் கான் இன்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.
சரோஜ் கான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். 3 முறை சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றவர் சரோஜ் கான். சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்தில் வந்த டோலாரே பாடல், மாதுரி தீக்ஷித்தின் தேசாப் படத்தில் வந்த ஏக் தோ தீன் பாடல் மற்றும் கரீனா கபூரின் ஜப் வீ மெட் படத்தில் வந்த ஏ இஷ்க் ஹாயே பாடலுக்காக சரோஜ் கானுக்கு தேசிய விருது கிடைத்தது.
அண்மை காலமாக அவர் புதுப்படங்களை அவ்வளவாக ஏற்காமல் இருந்தார். சரோஜ் கான் கடைசியாக கலங்க் படத்தில் மாதுரி தீக்ஷித்திற்கு தான் நடனம் அமைத்தார். முன்னதாக ஏக் தோ தீன் பாடலை ஜாக்குலின் பெர்ணான்டஸை வைத்து ரீமேக் செய்தபோது சரோஜ் கான் அதிருப்தி அடைந்தார்.
சரோஜ் கானின் மரணம் குறித்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது,
காலையில் எழுந்தவுடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தேன். டான்ஸ் ஆடுவது ரொம்ப ஈஸி என்பது போன்று செய்தவர். சரோஜ் கானின் மரணம் திரைத்துறைக்கு ஈடுகட்டமுடியாத இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
மாதுரி தீக்ஷித்தின் பெரும்பாலான வெற்றி பாடல்களுக்கு பின்னால் இருப்பது சரோஜ் கான் தான். 2020ம் ஆண்டை ரத்து செய்ய முடியுமா?. அடுத்தடுத்து மரணமாக இருக்கிறதே. பாலிவுட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் சரோஜ் கான். நடன அமைப்பின் தாய் என்று கூறலாம்.
ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அவரின் நடன அமைப்பை மேஜிக் எனலாம். சரோஜ் கானை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சரோஜ் கானின் டான்ஸ் ஸ்டெப்ஸை பார்த்து நாங்கள் எல்லாம் ஆடியிருக்கிறோமே. நினைவில் நிற்கும் ஸ்டெப்ஸை கொடுத்ததற்கு நன்றி சரோஜ் கான்ஜி என்று தெரிவித்துள்ளனர்.
சரோஜ் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று நினைத்து பயந்தார்கள். ஆனால் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. கடந்த 20ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்த சரோஜ் கான் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
அவரின் மரண செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனையால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பாலிவுட்டில் தொடர் மரணமாக இருக்கிறது. நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான் ஆகியோர் புற்றுநோயால் இறந்தார்கள்.
அதன் பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சரோஜ் கான் இன்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.
சரோஜ் கான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். 3 முறை சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றவர் சரோஜ் கான். சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்தில் வந்த டோலாரே பாடல், மாதுரி தீக்ஷித்தின் தேசாப் படத்தில் வந்த ஏக் தோ தீன் பாடல் மற்றும் கரீனா கபூரின் ஜப் வீ மெட் படத்தில் வந்த ஏ இஷ்க் ஹாயே பாடலுக்காக சரோஜ் கானுக்கு தேசிய விருது கிடைத்தது.
அண்மை காலமாக அவர் புதுப்படங்களை அவ்வளவாக ஏற்காமல் இருந்தார். சரோஜ் கான் கடைசியாக கலங்க் படத்தில் மாதுரி தீக்ஷித்திற்கு தான் நடனம் அமைத்தார். முன்னதாக ஏக் தோ தீன் பாடலை ஜாக்குலின் பெர்ணான்டஸை வைத்து ரீமேக் செய்தபோது சரோஜ் கான் அதிருப்தி அடைந்தார்.
சரோஜ் கானின் மரணம் குறித்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது,
காலையில் எழுந்தவுடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தேன். டான்ஸ் ஆடுவது ரொம்ப ஈஸி என்பது போன்று செய்தவர். சரோஜ் கானின் மரணம் திரைத்துறைக்கு ஈடுகட்டமுடியாத இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
மாதுரி தீக்ஷித்தின் பெரும்பாலான வெற்றி பாடல்களுக்கு பின்னால் இருப்பது சரோஜ் கான் தான். 2020ம் ஆண்டை ரத்து செய்ய முடியுமா?. அடுத்தடுத்து மரணமாக இருக்கிறதே. பாலிவுட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் சரோஜ் கான். நடன அமைப்பின் தாய் என்று கூறலாம்.
ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அவரின் நடன அமைப்பை மேஜிக் எனலாம். சரோஜ் கானை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சரோஜ் கானின் டான்ஸ் ஸ்டெப்ஸை பார்த்து நாங்கள் எல்லாம் ஆடியிருக்கிறோமே. நினைவில் நிற்கும் ஸ்டெப்ஸை கொடுத்ததற்கு நன்றி சரோஜ் கான்ஜி என்று தெரிவித்துள்ளனர்.