ஆப்நகரம்

ஹய்யோ, இந்த கொடுமையை எங்க போய் சொல்ல: ஹீரோவை பார்த்து சிரிக்கும் ரசிகாஸ்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அணிந்த உடை யாருடையது என்று கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளவாசிகள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 28 Jan 2020, 4:38 pm
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அணிந்த உடை யாருடையது என்று கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளவாசிகள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil priyanka chopra or ranveer singh who wore it better
ஹய்யோ, இந்த கொடுமையை எங்க போய் சொல்ல: ஹீரோவை பார்த்து சிரிக்கும் ரசிகாஸ்


ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வித்தியாசமாக உடை அணிவார். அவர் உடையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் அவர் தான் நடித்துள்ள 83 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் உடை.

தீபிகா

ரன்வீர் சிங்கின் உடையை பார்த்தவர்கள் அவசரத்தில் மனைவி தீபிகா படுகோனின் ஆடையை உடுத்திவிட்டார் போன்று என்று கலாய்த்தார்கள். இந்நிலையில் நெட்டிசன்களோ இது தீபிகாவின் உடை இல்லை மாறாக நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உடை என்று தெரிவித்துள்ளனர். ப்ரியங்கா, ரன்வீர் ஆகிய இருவரில் யாருக்கு இந்த உடை நன்றாக உள்ளது என்றும் கேட்டுள்ளனர்.

ஆடை

ரன்வீர் இப்படி கலர்ஃபுல்லாக உடை அணிவது தீபிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தீபிகா எவ்வளவோ சொல்லியும் ரன்வீர் கேட்கவில்லையாம். அதன் பிறகே உன் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் உடுத்து என்று தீபிகா விட்டுவிட்டாராம். கணவரை மற்றவர்கள் கலாய்ப்பதை பார்த்து தான் அவர் அறிவுரை வழங்கினாராம்.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா கிராமி விருது விழாவில் ரொம்ப ஃப்ரீயாக உடை அணிந்து கலந்து கொண்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு விளாசியுள்ளனர். ஒரு சிலரோ நிஜத்தில் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி புகைப்படத்தில் உடை அணிவித்துள்ளனர். ப்ரியங்கா அமெரிக்காவில் செட்டில் ஆனதும் ஆனார் ஆடை குறைப்பு அதிகமாகிவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. சிலரோ ப்ரியங்காவுக்கு முன்பு தீபிகா படுகோன் கூட இப்படி உடை அணிந்துள்ளார் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Twitter-WHATS UP BOLLYWOOD

அடுத்த செய்தி

டிரெண்டிங்