ஆப்நகரம்

கொரோனா படுத்தும் பாடு: எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிட்டாரே

கொரோனா வைரஸ் பரவுவுதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு நான் பார்க்க இப்படித் தான் இருப்பேன் என்று கூறி அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2020, 1:34 pm
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் திரையுலக பிரபலங்கள் வீட்டில் இருக்க வேண்டியதை தவிர வேறு வழியில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் அடிக்கடி ஏதாவது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil ranveer singh


ரன்வீர் இன்று தன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, குவாரன்டீனில் இருந்து வெளியே வரும் போது நான் இப்படித் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram Me coming out of quarantine A post shared by Ranveer Singh (@ranveersingh) on Mar 22, 2020 at 2:51pm PDT


ரன்வீர் சிங்கின் பெயரை சொன்னாலே சுறுசுறுப்பு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி ஒரு இடத்தில் இருக்க முடியாதவர் எப்படித் தான் வீட்டில் முடங்கியுள்ளாரோ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ரன்வீர் சிங் ஏதாவது போஸ்ட் போட்டால் மனைவி தீபிகா படுகோன் கலாய்த்து கமெண்ட் போடுவார். ஆனால் இந்த போஸ்ட்டுக்கு அவர் எந்த கமெண்ட்டும் போடவில்லை.

நடிகரை மணந்த 'ஸ்ரீதேவி' மகள்: திருவிழா போன்று நடந்த திருமணம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்