ஆப்நகரம்

எனக்கு NCB சம்மன் கிடைக்கவில்லை: ரகுல் ப்ரீத் தரப்பு பதிலால் தொடரும் சர்ச்சை

போதை பொருள் பற்றி விசாரிக்க என்சிபி அனுப்பிய சம்மன் தனக்கு கிடைக்கவில்லை என ரகுல் ப்ரீத் சிங் தரப்பு தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 12:02 pm
பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் போதை பொருள் சர்சை வழக்கில் நாளுக்கு நாள் பல பிரபலங்கள் சிக்கி வருகிறார்கள். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் காதலி ரியா ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், நேற்று ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய நான்கு நடிகைகளுக்கு Narcotics Control Bureau எனப்படும் NCB சம்மன் அனுப்பியிருந்தது. ரகுல் ப்ரீத் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனக்கு
Samayam Tamil Rakul Preet

சம்மன் எதுவும் கிடைக்கவில்லை என ரகுல் பிரீத் தரப்பு கூறியிருக்கிறது.

இந்நிலையில் இது பற்றி இருக்கும் NCB அதிகாரி ஒருவர் 'சம்மன் நேற்றே ரகுல் ப்ரீத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும், அவரை பல்வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், போனிலும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் தற்போது வரை ரெஸ்பான்ஸ் அளிக்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் கிடைக்கவில்லை என அவரது மேனேஜர் அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதற்கு தான் என்சிபி அதிகாரி கேபிஎஸ் மல்ஹோத்ரா இப்படி பதிலளித்திருக்கிறார். இன்று நேரில் ஆஜராவதில் இருந்து தப்பிப்பதற்காக ரகுல் பிரீத் இப்படி கூறி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்ற வாரம் ரகுல் ப்ரீத் பெயரை ரியா விசாரணையில் தெரிவித்து இருக்கிறார் என செய்தி வெளியான நிலையில், உடனே ரகுல் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் media trial பற்றி அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் தான் அவர் நேரில் ஆஜராக Narcotics Control Bureau
சம்மன் அனுப்பி இருக்கிறது.

இன்று ரகுல் ப்ரீத் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது போலவே, நாளை செப்டம்பர் 25ம் தேதி தீபிகா படுகோன் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதே போல ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் அதற்கு மறுநாள் (செப்டம்பர் 26ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மட்டுமின்றி பிரபல பேஷன் டிசைனர் Simone Khambattaக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதனால் அவர் இன்று நேரில் வந்திருக்கிறார். அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்