ஆப்நகரம்

தன் மரணம் பற்றி 3 வருஷத்திற்கு முன்பு ரிஷி கபூர் கூறியது போன்றே நடந்துடுச்சே

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தன் மரணம் குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ட்வீட் செய்தது போன்றே நடந்துவிட்டது.

Samayam Tamil 3 May 2020, 3:20 pm
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிர் இழந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் அவரின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப்படவில்லை.
Samayam Tamil rishi kapoor


ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் 20 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி பாலிவுட் நடிகர் வினோத் கன்னா மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ரிஷி கபூர் கோபமாக ட்வீட் செய்தார்.

ட்விட்டரில் ரிஷி அப்போது அவர் கூறியதாவது,

வெட்கக்கேடு. இந்த தலைமுறையை சேர்ந்த ஒரு நடிகர் கூட வினோத் கன்னாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் வினோத் அவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மரியாதை அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏன் இப்படி?. நான் இறக்கும்போது என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் தோள் கொடுக்க மாட்டார்கள். இன்றைய ஸ்டார்கள் மீது மிக மிக கோபமாக உள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாலிவுட்காரர்கள் ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. நடிகர் அபிஷேக் பச்சன் மட்டுமே கலந்து கொண்டார். ரிஷி 3 ஆண்டுகளுக்கு முன்பு ட்வீட் செய்தது போன்றே நடந்துவிட்டது.
அப்பா முகத்தை கடைசியாக பார்க்க முடியாமல் போச்சே: ரிஷி கபூர் மகள் கண்ணீர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்