ஆப்நகரம்

பசிச்சாலும் புலி புல்லைத் தின்னாதா, தின்னுடுசுப்பா, தின்னுடுசுப்பா

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் பசிச்சாலும் புலி புல்லைத் தின்னாதுன்னு சொன்னது பொய்யாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 10 Apr 2020, 5:55 pm
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கொரோனா ஊடரங்கால் தனது குடும்பத்தாருடன் பண்ணை வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தனக்கு பிடித்த குதிரைக்கு காலை உணவாக புல்லை கொடுத்துள்ளார். சின்னப் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும்போது அது சாப்பிட மறுத்தால் நீ சாப்பிடலைனா நான் சாப்பிட்டுவிடுவேன் என்று அம்மாமார்கள் சொல்வார்கள்.
Samayam Tamil salman khan


அந்த வகையாக குதிரையை சாப்பிட வைக்க சல்மான் கான் தானும் புல்லைத் தின்றுள்ளார். சல்மான் சாப்பிடுவதை பார்த்த குதிரை பின்னர் புல்லை சாப்பிட்டது. அந்த வீடியோவை சல்மான் கான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram Breakfast with my love... A post shared by Salman Khan (@beingsalmankhan) on Apr 9, 2020 at 10:44pm PDT


சல்மான் கானின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போன்று அவரை பாராட்டியுள்ளனர். ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய படங்களில் சல்மான் கானின் பெயர் டைகர். அதனால் தான் சல்மான் புல்லைத் தின்றதை பார்த்தவர்கள் புலி புல்லை தின்னுடுச்சேப்பா என்று தெரிவித்துள்ளனர். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் சல்மான் கான் நடித்துள்ள ராதே படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது . ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறையை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு சல்மான் கான் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் புற்றுநோய் வந்ததை கணவரிடம் இருந்து மறைத்த நடிகை

அடுத்த செய்தி

டிரெண்டிங்