ஆப்நகரம்

குளிர்பானத்தில் போதைப் பொருள் கொடுத்து பெண் பலாத்காரம்: வாரிசு நடிகர் மீது வழக்கு

பிரபல நடிகர் மிதுன் சக்ரபர்த்தியின் மகன் மஹாக்ஷய் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2020, 1:26 pm
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தியின் மகன் மஹாக்ஷய். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் ஓஷிவாரா காவல் நிலையத்தில் மஹாக்ஷய் மீது கடந்த வியாழக்கிழமை இரவு பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil mahaakshay chakraborty


இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

மஹாக்ஷய் சக்ரபர்த்தியை கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காதலித்து வந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் மஹாக்ஷய் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

காதலித்த காலத்தில் அந்த பெண் அந்தேரி பகுதியில் இருக்கும் மஹாக்ஷயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டை மஹாக்ஷய் கடந்த 2015ம் ஆண்டு வாங்கினார். வீட்டிற்கு சென்றபோது மஹாக்ஷய் தனக்கு குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுத்து உறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் கூறினார்.

தான் கர்ப்பமானதாகவும், கருவை கலைக்குமாறு கூறி மஹாக்ஷய் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அந்த பெண் தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

என்னை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று அந்த பெண் மஹாக்ஷயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மஹாக்ஷய் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் மஹாக்ஷய்க்கு போன் செய்தபோது அவரின் தாய் யோகிதா பாலி அவரை மிரட்டினாராம் என்றார்.

முன்னதாக அந்த பெண் மஹாக்ஷய் மற்றும் அவரின் தாய் யோகிதா பாலி ஆகியோர் மீது டெல்லியில் இருக்கும் பேகம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் புகார் அளித்திருக்கிறார். 2018ம் ஆண்டு அந்த பெண் தன் சகோதரருடன் சேர்ந்து டெல்லிக்கு ஜாகையை மாற்றிவிட்டார். அங்கு அவர்களின் குடும்ப நண்பர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.

அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மஹாக்ஷய் மீது வழக்குப்பதிவு செய்து அதை கிரைம் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். மஹாக்ஷய் மற்றும் யோகிதாவுக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் அந்த பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். டெல்லி உயர் நீதிமன்றமோ, சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தது. இதையடுத்தே அந்த பெண் தற்போது ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரின்பேரில் மஹாக்ஷய் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிதுன் சக்ரபர்த்தியை போன்றே மஹாக்ஷயும் ஒரு நடிகர் ஆவார். ஹான்டட் 3டி, லூட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் மஹாக்ஷய் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஹீரோவுடன் ஓடிப் போயிடுவேன்: பெற்றோரை மிரட்டிய வாரிசு நடிகை

அடுத்த செய்தி

டிரெண்டிங்