ஆப்நகரம்

முதல் திருமண நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த நடிகை

முதல் திருமண நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்வேதா பாசு.

Samayam Tamil 11 Dec 2019, 9:49 am
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் ஸ்வேதா பாசு(28). அவருக்கும் இயக்குநர் ரோஹித் மிட்டலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்களின் முதல் திருமண நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கணவரை பிரிவதாக ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
Samayam Tamil shweta basu prasad


இது குறித்து ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

நானும், ரோஹித் மிட்டலும் பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். பல மாதங்கள் யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அருமையான நினைவுகளை தந்ததற்காக நன்றி ரோஹித். உங்களுக்கு நல்வாழ்வு அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக படங்களில் அறிமுகமான ஸ்வேதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் கேங்ஸ்டர்ஸ் என்கிற வெப் தொடரிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த போது அவர் சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகே அவர் திருமணம் செய்தார்.

இந்நிலையில் அந்த திருமணம் ஓராண்டில் முடிந்துவிட்டது. ஸ்வேதா பாசுவின் அறிவிப்பு அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஸ்வேதா தற்போது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்