ஆப்நகரம்

வேகமாக ஓடும் வாழ்க்கை.. தற்கொலை செய்து கொள்ளும் முன் சுஷாந்த் சிங்கின் கடைசி இன்ஸ்டாகிராம் போஸ்ட்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு ஒரு வாரத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2020, 4:26 pm
முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தோனி வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் அவர் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Sushant Singh Rajput


அவரது இந்த அதிர்ச்சி முடிவு பற்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மிக உருக்கமாகப் பேசி வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் சுஷாந்த் சிங் ராஜ்புட் 'வாழ்க்கை எவ்வளவு வேகமானது' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இறந்த அவரது அம்மா நினைவாக தான் அந்த பதிவை அவர் போட்டுள்ளார்.

"Blurred past evaporating from teardrops, Unending dreams carving an arc of smile, And a fleeting life, negotiating between the two" என அந்த பதிவில் சுஷாந்த் சிங் கூறி உள்ளார்.

View this post on Instagram Blurred past evaporating from teardrops Unending dreams carving an arc of smile And a fleeting life, negotiating between the two... #माँ ❤️ A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on Jun 3, 2020 at 5:43am PDT

"மங்கலான இறந்தகாலம் கண்ணீர் துளியில் இருந்து மறைகிறது. முடிவே இல்லாத கனவு சிரிப்பு தடத்தைப் உருவாக்கி கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் வேகமாக ஓடும் வாழ்க்கை இதற்கு இரண்டுக்கும் நடுவில் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது" என சுஷாந்த் சிங் கூறியிருக்கிறார்.

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், அதன் ரிலீஸ் நேரத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அம்மா பற்றி மிக உருக்கமாகப் பேசி இருந்தார். "நான் வெற்றி பெறுவதைப் பார்க்க அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் இருந்திருந்தால் நிச்சயம் என்னை பார்த்து பெருமை அடைந்திருப்பார்."

அம்மா இருக்கும்போது அதிகம் பிடித்த விஷயங்கள் தற்போது அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. சிலவற்றின் மீது ஆர்வம் செலுத்த அதிகம் கஷ்டப்பட்டுதான் செய்தேன். எந்த பொருளை பார்த்தும் அதிக பிரகாசம் பரவசம் அடைந்தது இல்லை. நடிப்பு எனக்கு அதிகம் பிடிக்க ஒரு காரணமாக அது இருக்கலாம் என்று சுஷாந்த் சிங் ராஜ்புட் பேட்டியில் பேசியிருந்தார்.

சுஷாந்த் சிங் தோனி வாழ்க்கை வரலாற்று படத்திற்குப் பிறகு Chhichhore என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக பாலிவுட் மார்க்கெட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் மதிப்பு கூடியது.

மேலும் அவர் ஒப்பந்தமாகியிருந்தார் பல படங்கள் கடந்த சில வருடங்களில் டிராப் ஆகியிருக்கின்றன. அதுவும் சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு செல்ல ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா லாக் டவுனில் நடிகர் சுஷாந்த் தனது வீட்டில் தனிமையில் தான் இருந்துள்ளார். அவரது மேனேஜர் திஷா சாலியன் கடந்த ஜூன் 9ம் தேதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சுஷாந்த் சிங்கும் தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்