ஆப்நகரம்

என்னை கொன்னுட்டு தற்கொலைனு சொல்லிடுவாங்க: மோடியிடம் நடிகை புகார்

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாயல் கோஷ் பிரதமர் நரேந்திர மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2020, 2:31 pm
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில் தெரிவித்தார். அதன் பிறகு அனுராக் கஷ்யப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அனுராக் கஷ்யப்பை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
Samayam Tamil payal ghosh


பாயல் கோஷ் தெரிவித்த புகாரில் உண்மை இல்லை என்றார் அனுராக் கஷ்யப். இந்நிலையில் பாயல் கோஷ் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பாயல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்த மாஃபியா கும்பல் என்னை கொலை செய்துவிடும் சார் @PMOIndia. @narendramodi sir @sharmarekha ma’am. என்னை கொன்றுவிட்டு தற்கொலை அல்லது வேறு ஏதாவது என்று நிரூபித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாயல் ட்விட்டரில் கூறியதாவது, நான் சுஷாந்த் போன்று இறப்பதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மோடி சார். பிற பாலிவுட் நடிகர்களை போன்றே என் மரணமும் மர்மமாக இருக்கப் போகிறது என்றார்.

பாயலின் ட்வீட்டுகளை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

உங்களை பாலிவுட் மாஃபியா இல்லை மாறாக அந்த கோஷ்டி கொலை செய்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகே பாலிவுட்டின் லட்சணம் தெரிய வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

நீங்கள் கவலைப்பட வேண்டாம் பாயல். கங்கனா ரனாவத்தை போன்று உங்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அனுராக் கஷ்யப் பற்றி பாயல் தெரிவித்ததாவது,

அனுராக் கஷ்யப்பை முதல் முறையாக அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அவர் தன் வீட்டு முகவரியை கொடுத்து அங்கு வருமாறு கூறினார். நானும் சென்றேன். அன்று அவர் நல்லவிதமாக நடந்து கொண்டார். எனக்கு சாப்பாடு கொடுத்தார், தான் பட்ட கஷ்டங்களை பற்றி கூறினார். அதன் பிறகு மீண்டும் ஒரு நாள் என்னை தன் வீட்டிற்கு வருமாறு கூறினார். அதனால் நான் சென்றேன். இம்முறை அவர் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த அறையில் புத்தகங்கள், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்தன. என்னை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொள்ள முயன்றார். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். அவரோ பல நடிகைகள் தன்னுடன் சகஜமாக இருப்பதாகவும், 200 பெண்களுடன் உறவு கொண்டதாகவும் பெருமையாக தெரிவித்தார்.

நான் கெஞ்சியதை பார்த்த அவர் அடுத்த முறை வரும்போது மனதளவில் தயாராகிவிட்டு வருமாறு கூறினார். நானும் சரி என்று கூறி அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன் பிறகு நான் அவரை சந்தித்ததே இல்லை என்றார்.

ஜிப்பை கழற்றி, வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார்: நயன் வில்லன் மீது நடிகை புகார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்