ஆப்நகரம்

நடிகர் என்ன செய்கிறார் என்பதை கிசுகிசு வெப்சைட் மூலம் டிராக் செய்த அப்பா

தன் மகன் ரன்பிர் கபூர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை கிசுகிசு இணையதளம் ஒன்றின் மூலம் தான் தெரிந்து கொண்டதாக ரிஷி கபூர் தெரிவித்தார் என்கிறார் அபிஷேக் பச்சன்.

Samayam Tamil 13 Apr 2021, 5:26 pm
ரன்பிர் கபூர் வாழ்வில் நடப்பது குறித்து அவரின் தந்தை ரிஷி கபூர் எப்படி தெரிந்து கொண்டார் என்பதை அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil this is how rishi kapoor came to know about ranbir kapoors activities
நடிகர் என்ன செய்கிறார் என்பதை கிசுகிசு வெப்சைட் மூலம் டிராக் செய்த அப்பா


ரன்பிர், ரிஷி

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருக்கிறது. தற்போது அவர் நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். ரன்பிர் கபூர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல மறைந்த அவரின் தந்தையும், நடிகருமான ரிஷி கபூருக்கும் ஆர்வம் அதிகம். இது குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்த விஷயம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

அபிஷேக் பச்சன்

ரிஷி கபூர் பற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது, நாங்கள் படப்பிடிப்புக்காக சிம்லாவுக்கு சென்றிருந்தோம். தினமும் காலை நான் ரிஷி கபூருடன் தான் காபி குடிப்பேன். அதனால் ஒரு நாள் காலை நான் அவரின் அறைக்கு சென்றபோது லுங்கி அணிந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்தார். அவர் கம்ப்யூட்டரில் எதையோ படித்ததை பார்க்க க்யூட்டாக இருந்தது என்றார்.

கிசுகிசு

காலையிலேயே கம்ப்யூட்டர் முன்பு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ரிஷி கபூரிடம் கேட்டேன். அதற்கு அவரோ, இது பிரபலங்களை பற்றி கிசுகிசு எழுதும் இணையதளம். இந்த இணையதளத்தை பார்த்து தான் ரன்பிர் கபூர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறேன் என்றார் ரிஷி கபூர். அவர் சொல்லும் வரை அப்படி ஒரு இணையதளம் இருப்பதே எனக்கு தெரியாது. மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்றை பேசத் தெரியாதவர் ரிஷி என்கிறார் அபிஷேக் பச்சன்.

அப்பா, மகன்

முன்னதாக ரன்பிர் கபூர் பற்றி ரிஷி பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் ரன்பிருடன் நெருக்கமாக விரும்பிய போதிலும் அப்படி இல்லை. அதற்காக வருத்தப்பட்டிருக்கிறேன். எனக்கும், மகனுக்கும் இடையே நட்பு இல்லை. என் தந்தை அப்படி இல்லாததால் நானும் அது போன்றே இருக்கிறேன் என நினைக்கிறேன். என் மகன் மீது பாசம் வைத்திருக்கிறேன். எனக்கு ஒரே மகன். ஆனால் அவர் தன் அம்மாவுடன் தான் நெருக்கமாக இருக்கிறார் என்றார். புற்றுநோயுடன் போராடி வந்த ரிஷி கபூர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி மரணம் அடைந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்