ஆப்நகரம்

சிலர் வாயடைக்கத் தான் என் காதலர் போட்டோவை வெளியிட்டேன்: நடிகை ஓபன் டாக்

காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது ஏன் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 May 2020, 8:46 am
ஜன்னத் 2 இந்தி படம் மூலம் நடிகையானவர் இஷா குப்தா. இந்தி தவிர தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். யார் இவன் படம் மூலம் கோலிவுட் வந்தார் இஷா. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால் இஷா குப்தா எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பார்.
Samayam Tamil esha gupta


அவ்வப்போது தனது கவர்ச்சி, படுகவர்ச்சி, டாப்லெஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். டாப்லெஸ் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் விளாசினால் பதிலுக்கு கமெண்ட் அடிப்பார் இஷா. இல்லை என்றால் பேசுபவர்கள் பேசட்டும் எனக்கென்ன வந்தது என்று அமைதியாக இருப்பார்.

நடிகைகளுக்கு காதல் வந்தால் வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் தான் ஸ்பெயினை சேர்ந்த தொழில் அதிபர் மானுவல் கம்போஸ் குவாலார் என்பவரை காதலிப்பதாக இஷா அறிவித்தார். மேலும் தானும், காதலரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார் இஷா. அதை பார்த்த ரசிகர்கள் அது பற்றி சில நாட்கள் பரபரப்பாக பேசினார்கள்.

இந்நிலையில் காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு காதலை ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை இஷா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
நானும், அவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ரொம்ப நன்றாக இருந்தது. அதனால் அதை வெளியிட்டேன். மேலும் இந்தியாவில் இருக்கும் ஆண்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது ஒரு பெண் தனியாக இருந்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை என்ரு நினைத்து உதவுகிறேன் என்ற பெயரில் அணுகுவார்கள்.

ஆண்களின் இந்த செயலால் நான் எரிச்சல் அடைந்துவிட்டேன். அதனால் சரி என்று அந்த புகைப்படத்தை வெளியிட்டேன். மேலும் நான் சமூக வலைதளங்களில் என்ன போஸ்ட் செய்கிறேன் என்பதை என் காதலர் கண்டுகொள்ள மாட்டார். அவர் ரொம்ப பிரைவேட்டான நபர். அதனால் சரி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தேவையில்லாமல் பேசுபவர்களை வாயடைக்கச் செய்ய வேண்டும் என்று அப்படி செய்தேன்.

அது மட்டும் அல்ல என் சந்தோஷத்திற்காகவும் புகைப்படத்தை வெளியிட்டேன். அது என் பர்சனல் தான் ஆனால் அதை நான் ஷேர் செய்யக் கூடாது என்று இல்லையே. இருப்பினும் என் காதல் பற்றிய முழு விபரம் யாருக்கும் தெரியவில்லை. எவ்வளவு சொல்லணும், எவ்வளவு சொல்லக் கூடாது என்பது என் இஷ்டம்.
தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை. நானும், அவரும் கொஞ்ச காலமாகவே காதலித்து வருகிறோம். திருமணம் பற்றி கேட்காதீர்கள். அது பற்றி எனக்கு தெரியவில்லை. திருமணம் நடக்கும்போது அது பற்றி அனைவருக்கும் தெரிய வரும்.

திருமணத்தில் என் பெற்றோர், நான், அவர் இருப்போம். அவ்வளவு தான். ஆனால் நானும் அவரும் சேர்ந்து நிறைய நேரம் செலவிட விரும்புகிறோம். அதனால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டோம். மேலும் கொரோனா வைரஸ் பிரச்சனையால் விரும்பினால் கூட திருமணம் நடக்காது என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்