ஆப்நகரம்

ஒரு மீமுக்கு போரா?: அக்‌ஷய் குமாரை சண்டைக்கு அழைக்கும் அண்டர்டேகர்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேகர் சமூக வலைதளம் மூலம் சண்டைக்கு அழைத்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Jun 2021, 6:44 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அக்‌ஷய் குமார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருந்தார் அக்‌ஷய் குமார். 366 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உலக அளவில் அறியப்படுகிறார். இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாரை பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகர் சண்டைக்கு அழைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Akshay Kumar_Undertaker
Akshay Kumar_Undertaker


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அக்‌ஷய் குமார். இவர் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லாடியோன் கா கில்லாடி. இந்த திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகர் உடன் மோதி வெற்றிப்பெறுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் அண்டர்டேகர் வேடத்தில் இருந்த நடிகரை அடித்து வீழ்த்துவார் அக்‌ஷய் குமார். இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக அக்‌ஷய்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அண்டர்டேகரை தோற்கடித்தவர்கள் என பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் படத்துடன் அக்‌ஷய் குமார் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

கடற்கரையில் ஆண் நண்பருடன் ஹாயாக வலம் வரும் ஸ்ரீதேவி மகள்: வைரலாகும் புகைப்படங்கள்!
இந்த மீம் இணையத்தில் வைரலானததை தொடர்ந்து அக்‌ஷய்குமார் பதிவில் அண்டர்டேகர் பதிலளித்திருந்தார். அதில், உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என கேள்வி எழுப்பினார். அதற்கு அக்‌ஷய் குமார், எனது காப்பீட்டை ஆய்வு செய்துவிட்டு பதில் கூறுகிறேன் சகோதரரே என நகைச்சுவையாக பதிலளித்தார். இந்நிலையில் இந்த மீம்யும், அக்‌ஷய்குமார், அண்டர்டேகர் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பெல் பாட்டம்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்