ஆப்நகரம்

Sushmita Sen: உயிருடன் இருக்க 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுத்த சுஷ்மிதா சென்: இப்போ மாரடைப்பு

Sushmita Sen Heart Attack: தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாக பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக உயிர் வாழ 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுத்தார் சுஷ்மிதா.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 3 Mar 2023, 9:25 am
Sushmita sen angioplasty: ஃபிட்னஸ் ஃப்ரீக்கான சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
Samayam Tamil when sushmita sen took steroid to stay alive
Sushmita Sen: உயிருடன் இருக்க 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுத்த சுஷ்மிதா சென்: இப்போ மாரடைப்பு


சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்கிற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். தஸ்தக் பாலிவுட் படம் மூலம் நடிகையானார். நாகர்ஜுனாவை வைத்து பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார் சுஷ்மிதா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.

மாரடைப்பு

சுஷ்மிதா சென் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட்டை பார்த்து கவலைப்படாத ரசிகர்களே இல்லை எனலாம். அவர் இன்ஸ்டா போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, உன் இதயத்தை சந்தோஷமாக வைத்துக் கொள், உனக்கு தேவைப்படும்போது அது உன்னுடன் இருக்கும் ஷோனா என என் அப்பா தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. எனக்கு பெரிய இதயம் என மருத்துவர் தெரிவித்தார் என்றார்.

பிரார்த்தனை

நல்ல செய்தியை தெரிவிக்கத் தான் இந்த போஸ்ட் போட்டிருக்கிறேன். நான் நலமாக இருக்கிறேன் என சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று போஸ்ட் போட்டார். இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்

சுஷ்மிதா சென் பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது, எப்பொழுதும் சந்தோஷமாகவும், பாசிட்டிவாகவும் இருப்பவர். அவருக்கே மாரடைப்பு என்றால் நம்ப முடியவில்லை. ஃபிட்னஸ் விஷயத்திலும் குறை வைக்க மாட்டார். தற்போது ஃபிட்டாக இருப்பவர்களுக்கு தான் மாரடைப்பு வருகிறது. அது ஏன் என தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஹார்மோன்

முன்னதாக சுஷ்மிதாவுக்கு ஹார்மோன் பிரச்சனை இருந்தது. இது குறித்து அவர் கூறியதாவது, நான் நிர்பாக் படப்பிடிப்பை முடித்தபோது என் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நான் மயங்கி விழுந்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள், என் அட்ரினல் சுரப்பிகள் கார்டிசாலை சுரப்பதை நிறுத்திவிட்டதாக கூறினார்கள். மேலும் நான் மயங்கிய பிறகு கண் விழித்ததே பெரிய விஷயம் என்றார்கள் என்றார்.

ஸ்டெராய்ட்

சுஷ்மிதா மேலும் கூறியதாவது, அட்ரினல் சுரப்பி பிரச்சனையால் நான் வாழ்க்கை முழுவதும் ஸ்டெராய்ட் எடுக்க வேண்டும் என்றார்கள். ஹைட்ரோகார்டிசோன் என்கிற ஸ்டெராய்டை நான் 8 மணிநேரத்திற்கு ஒரு முறை எடுத்தால் தான் உயிர் வாழ முடியும் என்கிற நிலை. ஸ்டெராய்ட் எடுத்ததால் பக்கவிளைவுகள் அதிகமாக இருந்தது. என் இரத்த அழுத்தமும் உயர்ந்தது என்றார்.

அதிசயம்

சுஷ்மிதா சென் மேலும் கூறியதாவது, நான் அபுதாபிக்கு சென்றபோது எனக்கு ஸ்டெராய்டு கொடுக்காமல் மருத்துவமனையில் தங்க வைத்து பரிசோதனை செய்தார்கள். டிஸ்சார்ஜ் ஆனதும் நான் துபாய்க்கு கிளம்பினேன். அப்பொழுது டாக்டர் போன் செய்து, ஸ்டெராய்டு எடுத்துவிட்டீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். எடுக்க வேண்டாம். கார்டிசால் உங்கள் உடம்பில் இயற்கையாக சுரக்கிறது. என் 35 ஆண்டு கால சேவையில் அட்ரினல் சுரப்பி மீண்டும் கார்டிசாலை சுரப்பதை நான் பார்த்ததே இல்லை என்றார் டாக்டர். அதை கேட்டு என்னால் நம்ப முடியவில்லை என்றார்.


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்