ஆப்நகரம்

லாக்டவுனால் இந்த நடிகை வீட்டில் நடக்கவிருந்த விசேஷம்...

லாக்டவுனால் புது வீட்டில் குடியேற முடியாமல் போய்விட்டது என்று நடிகை யாமி கவுதம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 8:31 am
இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் யாமி கவுதம். தமிழில் கௌரவம் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் தேசிய விருது பெற்ற யுரி, பாலா ஆகிய படங்கள் வெளியாகின. யாமி கவுதம் சன்டிகரில் புது வீட்டில் குடியேற வேண்டியது.
Samayam Tamil yami gautam


புதுவீட்டில் குடியேற தயாரானபோது தான் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு எப்பொழுது நீக்கப்படும் சன்டிகருக்கு சென்று புது வீட்டில் எப்பொழுது குடியேறலாம் என்று காத்திருக்கிறார் யாமி.

இது குறித்து யாமி கவுதம் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படத் துவங்கியபோது நான் மும்பையிலும், என் குடும்பத்தார் சன்டிகரிலும் இருந்ததால் என் பெற்றோர் என்னை நினைத்து கவலைப்பட்டனர். வேலை முடிந்ததும் ஊருக்கு வந்துவிடுகிறேன் என்று அம்மாவிடம் கூறினேன். ஆனால் என் வேலை முடிவதற்குள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

பயணம் செய்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் என்று சொல்கிறார்களோ அப்பொழுது நான் சன்டிகர் செல்வேன். அதன் பிறகு நாங்கள் புது வீட்டில் குடியேறுவோம். நான் ஓவியர் இல்லை. இருப்பினும் துர்கா மாதாவின் ஓவியத்தை வரைந்தேன். அது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. புது வீட்டில் அந்த ஓவியத்தை வைக்க விரும்புகிறார் என்றார்.
ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்ணு ஒரு ஆண் என தெரிஞ்சா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்