ஆப்நகரம்

தயாரிப்பாளர்களை கதற விடும் பிரபல நடிகர்

நடிப்புக்கு பெயர் போன அந்த முன்னணி நடிகர் கேட்கும் சம்பளத்தை பார்த்து தான் அக்கட தேசத்து தயாரிப்பாளருக்கு பிபி எகிறுகிறதாம்.

Samayam Tamil 28 Feb 2021, 5:22 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அந்த ஹீரோவுக்கு தற்போது வில்லனாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம். அப்படி அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் வில்லனாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
Samayam Tamil gossip


இதையடுத்து அவரை தேடி வில்லன் வாய்ப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதிலும் அக்கட தேசத்து இயக்குநர்கள் அவரை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். இதை எல்லாம் புரிந்து கொண்ட நடிகரோ தன் சம்பளத்தை ஒரேடியடியாக உயர்த்தி விட்டார்.

கதை சொல்ல வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பல கோடிகள் கேட்கிறாராம். ஒரு நாளைக்கே ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறாராம். நடிகர் கண்டபடி விரலை காட்டுவதை பார்த்து தயாரிப்பாளர்களுக்கு கண்ணை கட்டுகிறதாம்.

மார்க்கெட் நன்றாக இருக்கும்போதே சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லாம் சரி தான். ஆனால் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.

எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் சரி நான் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் தான் வில்லத்தனம் செய்வேன் என்று அடம்பிடிக்கிறாராம். அவர் கட்டு கட்டாக சம்பளம் வாங்குவதை பார்க்கும் பிற வில்லன்களும், ஹீரோக்களும் வயித்தெரிச்சலில் இருக்கிறார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்