ஆப்நகரம்

என் லெவலே வேற: ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி கேட்கும் சர்ச்சை நடிகர்

சர்ச்சைகளை தேடிச் செல்லும் நடிகர் தன் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம்.

Samayam Tamil 18 May 2021, 6:08 pm
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகரானவர் அவர். தாராளமாக அன்பு காட்டி ரசிகர்களையும், திரையுலகினரையும் தன் வசப்படுத்தியவர்.
Samayam Tamil gossip


இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான படம் ஒன்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு நடிகரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. தன் மார்க்கெட் மேலும் சூடுபிடித்துள்ளதை உணர்ந்த நடிகர் அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.

அதாவது முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் தற்போதோ ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளம் வேண்டும் என்கிறாராம்.

என்ன சார், அசால்டா ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி கேட்கிறீர்களே, பார்த்து பண்ணப்படாதா என தயாரிப்பாளர்கள் கேட்டால் கண்டுகொள்வது இல்லையாம்.

இதோ பாருங்க, நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன், இல்லை என்றால் நடையை கட்டுங்க என்று நடிகர் கூலாக கூறுகிறாராம். நடிகர் சம்பள விஷயத்தில் அடம் பிடிப்பதால் அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கிளம்பிவிடுகிறார்கள்.

இப்படி தன்னை தேடி வரும் வாய்ப்பு அப்படியே திரும்பிச் செல்வதால் நடிகர் கவலையே படவில்லையாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்