ஆப்நகரம்

மத்தவங்களுக்கு ஒர்க்அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது: புலம்பும் நடிகை

பட வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஆசையில் நடிகை ஒருவர் வெளியிடும் புகைப்படங்களை யாருமே கண்டுகொள்வது இல்லை.

Samayam Tamil 23 Oct 2020, 5:29 pm
பேய் படம் மூலம் பிரபலமானவர் அந்த நடிகை. நல்ல சிவப்பாக இருப்பார். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் ஒல்லியாகவும், இளமையாகவும் இருக்கிறார்.
Samayam Tamil gossip


அவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் எங்குமே அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை.

நடிகையும் சேலை, மாடர்ன் உடை என்று வகை, வகையாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். ஆனால் அவரை யாருமே கண்டுகொள்வதாக இல்லை.

லாக்டவுனில் அவர் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். தற்போதும் கூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் கோலிவுட்காரர்களின் கண்கள் அவர் மீது படவே இல்லை. அவருடன் நடிக்க எந்த முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டுவது இல்லை.

மற்ற நடிகைகள் போட்டோஷூட் நடத்தினால் ஒர்க்அவுட் ஆகிறது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நடிகை புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்