ஆப்நகரம்

எனக்கு மட்டும் ஏன் இப்படி?: மதுவும் கையுமாக கதறும் நடிகை

பிரபல நடிகை ஒருவர் தன் கெரியர் மோசமாக போய்க் கொண்டிருப்பதை பார்த்து குடித்து, குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறாராம்.

Samayam Tamil 30 Oct 2019, 4:54 pm
வட நாட்டை சேர்ந்த அந்த நடிகை அக்கட தேசத்து படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரை வாரிசு இயக்குநர் ஒருவர் கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்ததுடன் தனது மனைவியும் ஆக்கினார்.
Samayam Tamil gossip


அந்த திருமணம் நிலைக்கவில்லை. கணவரை பிரிந்த பிறகு நடிகை மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதையடுத்து ஹீரோயின் என்று இல்லை எதுவாக இருந்தாலும் சரி என கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்றார்.

வாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா?

நாட்கள் செல்லச் செல்ல அந்த வாய்ப்புகளும் வரவில்லை. இதையடுத்து நடிகை விரக்தியில் குடிக்கு அடிமையாகிவிட்டாராம். எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்று கூறி கதறிக் கதறி அழுகிறாராம்.

நடிகை பிரபல நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடிகருக்கு பயந்து தான் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அம்மணியை அணுகாமல் உள்ளார்களாம். இது குறித்து அறிந்த நடிகை நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று சத்தியம் செய்தும் கூட அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்த கட்டுப்பாட்டு விஷயத்தால் தான் அம்மணியின் கோலிவுட் கெரியர் படுத்துவிட்டதாம். நடிகையின் கையில் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. இரண்டுமே வேற்று மொழி படங்கள் ஆகும்.

நடிகை குடித்து குடித்து அவர் முகமே மாறிவிட்டதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்