ஆப்நகரம்

அந்த வெளங்காத 3 நடிகர்களை விட்டு விலகியதால் நல்லா இருக்கேன்: நடிகை

அந்த வீணாப் போனவங்க நட்பை முடித்துக் கொண்ட பிறகே தன் வாழ்க்கை நல்லபடியாக இருப்பதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 3:34 pm
அந்த வீணாப் போனவங்க நட்பை முடித்துக் கொண்ட பிறகே தன் வாழ்க்கை நல்லபடியாக இருப்பதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actress is happy that she is no longer friends with three actors
அந்த வெளங்காத 3 நடிகர்களை விட்டு விலகியதால் நல்லா இருக்கேன்: நடிகை


நடிகை

வட நாட்டில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை நன்கு படித்தவர். தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் அப்படியே கோலிவுட் பக்கமும் வந்தார். முதல் படத்திலேயே நடிப்பால் அசத்தி யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தார். ஆனால் நடிக்க வந்த கையோடு பெரிய இடத்து பிள்ளை, வாரிசு நடிகர், சர்ச்சை நடிகர் ஆகியோருடன் நட்பாகிவிட்டார். அந்த கூடா நட்பால் அம்மணியின் கெரியர் மரண அடி வாங்கியது.

கெட்ட பழக்கம்

அந்த நடிகர்களின் நட்பால் தேவையில்லாத பழக்கங்களையும் அம்மணி கற்றுக் கொண்டார். அந்த கெட்ட பழக்கத்தால் ஒரு பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது. அதன் பிறகே சுதாரித்துக் கொண்ட நடிகை இந்த ஆட்களுடன் சேர்ந்தால் நம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதை உணர்ந்து விலகினார். அந்த நேரத்தில் அவருக்கு இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட்

அம்மணிக்கு நடிக்கும் திறமை எக்கச்சக்கமாக இருந்தும் தென்னிந்திய படங்களில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தில் இருந்தவருக்கு பாலிவுட் கை கொடுத்தது. அங்கு கஷ்டப்பட்ட போதிலும் வெற்றி கண்டுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றால் அம்மணியை தான் முதலில் அழைக்கிறார்கள். கூடா நட்பில் இருந்து விலகிய பிறகு நடிகை இரண்டு வீடுகள், சொகுசு கார் எல்லாம் வாங்கி செமயமாக செட்டில் ஆகிவிட்டார்.

பழைய நெனப்பு

அதே சமயம் பேட்டிகளின்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கு நடந்ததை கூறி குமுறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழைய தோழியை பல காலம் கழித்து சந்தித்த நடிகை தான் நடிக்க வந்த போது நடந்த கலாட்டாக்களை எல்லாம் கூறியிருக்கிறார். நல்ல காலம் எனக்கு புத்தி வந்து அந்த ஆட்களை விட்டு விலகினேன். அதனால் தான் என் கெரியர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தாராம் நடிகை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்