ஆப்நகரம்

நான் செய்த காரியத்தால் நடிகருக்கு விவாகரத்தாகும்னு நினைக்கல: நடிகை புலம்பல்

நடிகரும், ஸ்டாரின் மகளும் பிரிந்ததை நினைத்து வாரிசு நடிகை கலக்கத்தில் இருக்கிறாராம்.

Samayam Tamil 24 Jan 2022, 5:15 pm
ஒல்லி நடிகரும், அவரின் காதல் மனைவியும் பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்து வந்ததாம். இருப்பினும் 2 பிள்ளைகள் ஆகிவிட்டதே என்று சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
Samayam Tamil gossip


இந்நிலையில் ஸ்டார் நடிகருடன் சேர்ந்து நடித்தார் வாரிசு நடிகை. அப்பொழுது அவர் ஒல்லி நடிகர் தன்னிடம் செய்த சில்மிஷத்தை எல்லாம் ஸ்டாரிடம் கூறி புலம்பினாராம்.

அதை கேட்ட ஸ்டார் கடுப்பாகி மகளிடம் தெரிவித்தாராம். மகள் நேராக தன் கணவரிடம் கேட்க ஏற்கனவே இருந்த பிரச்சனையில் இது பெரிதாகிவிட்டதாம்.

தான் ஸ்டாரிடம் சொன்ன விஷயத்தால் ஒல்லி நடிகரும், மனைவியும் பிரிவார்கள் என்று வாரிசு நடிகை எதிர்பார்க்கவே இல்லையாம். நான் ஏதோ மனசில் இருந்ததை கொட்டப் போய் இப்படி விவாகரத்து வரை வரும் என்று நினைக்கவில்லையே என வாரிசு நடிகை புலம்புகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்