ஆப்நகரம்

காதலும் கைகூடல, மாப்பிள்ளையும் செட்டாகல: கவலையில் நடிகை

பெற்றோர் கொடுக்கும் பிரஷரால் நடிகை ஒருவர் கவலையில் இருக்கிறாராம்.

Samayam Tamil 21 Aug 2020, 5:44 pm
நல்ல அழகும், முக்கியமாக நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நடிகையை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தன்மையாக நடந்து கொள்வார்.
Samayam Tamil gossip


அந்த நடிகையின் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது. நடிகைக்கு ஒருவர் மீது காதல் ஏற்பட அவரோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு நடிகை காதலாவது, கத்தரிக்காயாவது என்று இருக்கிறார்.

இந்நிலையில் அவர் வீட்டிலோ திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வருகிறார்கள். வயது ஏறிக் கொண்டே போகிறது, பொம்பள பிள்ளைக்கு சீக்கிரமாக திருமணம் நடந்தால் தான் நல்லது என்று பெற்றோர் பிரஷர் கொடுக்கிறார்களாம்.

நடிகைக்கோ இன்னும் சில காலம் படங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் பெற்றோர் அவரை புதுப் படங்களில் நடிக்க அனுமதிக்கவில்லை. அதனால் அண்மையில் அவரை தேடி வந்த பட வாய்ப்பை கூட ஏற்க மறுத்துவிட்டார்.

நடிகைக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. திருமண விஷயத்தால் நடிகை கவலையில் இருக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்