ஆப்நகரம்

எனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை

தனக்கு கிடைக்காதது தன் மகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணழகி நடிகை தீர்க்கமாக உள்ளார்.

Samayam Tamil 9 Sep 2019, 5:48 pm
கண்ணழகி நடிகை சிறு பிள்ளையாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டார். அதனால் அவரால் பிற பிள்ளைகளை போன்று பள்ளிக்கு சென்று படிக்க முடியாமல் போனது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருந்ததால் பையை எடுத்துக் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் மேக்கப் போட்டுக் கொண்டு ஷூட்டிங்கிற்கு சென்றார்.
Samayam Tamil actress wants her daughter to concentrate on studies
எனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை


இந்நிலையில் நடிகையின் செல்ல மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அந்த குட்டிப் பெண் தனது நடிப்பால் அசத்திவிட்டார். அந்த குட்டியின் நடிப்பை பார்த்தவர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று கூறி பாராட்டினார்கள். தன் மகளை ஆளாளுக்கு பாராட்டுவதை பார்த்து நடிகைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

நடிகையின் செல்ல மகளின் நடிப்பை பார்த்துவிட்டு ஏராளமான பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால் கண்ணழகியோ என் மகள் வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே நடிப்பார். அதற்கு சம்மதம் என்றால் ஒப்பந்தம் செய்யலாம் என்கிறாராம்.

நடிகை மகள் விஷயத்தில் கறாராக இருப்பதற்கு காரணம் உள்ளது. தன்னால் தான் மற்றவர்களை போன்று பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை, தன் மகளுக்காவது அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று நினைக்கிறார்.

மகளுக்கு நடிப்பு தான் எதிர்காலம் என்றாலும் படிப்பும் வேண்டும் என்று நடிகை நினைப்பதில் தவறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்