ஆப்நகரம்

ஏன் எனக்கு மட்டும் இப்படி?: புலம்பித் தள்ளும் பிரபல நடிகை

அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததால் இளம் நடிகை ஒருவர் கவலையில் இருக்கிறாராம்.

Samayam Tamil 26 Nov 2020, 5:27 pm
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த இளம் நடிகை. ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த அம்மணிக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெற்றி பெறவே இனி நான் லூசு பொண்ணாக எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.
Samayam Tamil gossip


ஹீரோ அல்ல மாறாக ஹீரோயினை சுற்றியே கதை நகரும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் தேர்வு செய்து நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வி அடைந்துள்ளது. நடிகையின் நடிப்பை பாராட்டினாலும், படம் சரியில்லை என்றே விமர்சனம் எழுந்துள்ளது.

நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை, பழையபடி ஹீரோக்களுடன் டூயட் பாடிவிட்டு போகலாமே என்று படம் பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர். ஆசை ஆசையாய் நடித்த நடிகை தன் கடின உழைப்பு வீணாகிவிட்டதே என்று கவலையில் இருக்கிறாராம்.

எனக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் ஒத்து வராதா என்று நடிகை புலம்புகிறாராம். முன்னணி இயக்குநர்கள் யாரும் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை தர விரும்பவில்லை. அவர்களோ, நடிகையின் படங்கள் தோல்வி அடைந்ததை பார்த்து இந்த பொண்ணுக்கு தேவையில்லாத வேலை என்கிறார்கள்.

ரூட்டை மாற்றினால் முதலிடத்தை பிடித்துவிடலாம் என்று நடிகை தப்புக் கணக்கு போட்டுவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்