ஆப்நகரம்

அள்ளிக் கொடுக்க நினைத்த நடிகை: கிள்ளிக் கொடுக்க வைத்த காதலர்

பிரபல நடிகை ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுக்க நினைக்க அவரின் காதலர் அதை தடுத்துவிட்டாராம்.

Samayam Tamil 21 Apr 2020, 6:29 pm
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அந்த நடிகை. தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார். அதனாலேயே அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Samayam Tamil gossip


நடிகைக்கு இரக்க குணம் அதிகம். அதனால் கொரோனா நிதியாக பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் அவரின் காதலருக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

கோடி, கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்களே கொஞ்சமாகத் தான் நிதி அளித்துள்ளனர். நீ ஒரு நடிகை, எதற்காக பெரிய தொகையை கொடுக்க நினைக்கிறாய். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், கொஞ்சமா கொடுத்தால் போதும் என்றாராம்.

இதையடுத்து நடிகை குறைந்த தொகையை நிதியாக அளித்துள்ளார். காதலரை விட நடிகை தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலரின் கெரியரை ஸ்டெடியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை.

நடிகை தனது காதலருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து வருகிறார். அவர் காதலருக்காக செலவு செய்யும் பணத்தில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே எடுத்துவிடலாம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்