ஆப்நகரம்

இதுக்கு தான் இம்புட்டு அலப்பறையா?: நடிகையை பார்த்து சிரிக்கும் கோலிவுட்

நடிகை ஒருவர் அண்மையில் செய்த அலப்பறையை பார்த்தவர்கள் அவர் நடித்த படங்கள் வெளியான பிறகு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 15 Jan 2021, 4:35 pm
அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் இரண்டு படங்களில் நடித்தாராம். அவர் நடித்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸானதாம். படத்தை பார்த்த யாரும் நடிகையை பாராட்டவில்லை, மாறாக கிண்டல் செய்கிறார்கள்.
Samayam Tamil gossip


இரண்டு படங்களிலுமே நடிகைக்கு டம்மி பீஸ் கதாபாத்திரம். முன்னதாக பட விழாவில் நடிகை செய்த அட்டகாசத்தை பார்த்து கோலிவுட்டில் பலர் கடுப்பானார்கள். நடிக்க வந்த வேகத்தில் ஏதோ நம்பர் ஒன் இடத்தில் இருப்பது போன்று இப்படி அதிகாரம் செய்கிறாரே.

இந்த பொண்ணு இப்படியே செய்தால் கோலிவுட்டில் நிலைக்க முடியாது என்றார்கள். இந்நிலையில் அவர் நடித்த படங்களை பார்த்தவர்கள், லூசுப் பெண்ணாக நடித்ததற்கு தான் நான் பெரிய ஹீரோயின் என்று அந்த விழாவில் ஓவர் பந்தா செய்தாரா என்று கூறி சிரிக்கிறார்கள்.

நடிக்கத் தெரியாவிட்டாலும் அடக்கமாக இருந்தால் சினிமாவில் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நடிகையோ ஆரம்பத்திலேயே அனைவரையும் பகைத்துக் கொள்கிறார். அவர் வந்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டியது தான் என்று கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்