ஆப்நகரம்

வில்லங்கமாக யோசித்து அதிரடி முடிவு எடுத்த 'சு.மூ.கு.' நடிகர்: அதிர வைத்த தயாரிப்பாளர்கள்

இயக்குநர்களின் மனதை மாற்றுவதாக நினைத்து சுமார் மூஞ்சி குமார் நடிகர் செய்த காரியம் புஸ்ஸாகிவிட்டது.

Samayam Tamil 16 Aug 2022, 4:25 pm
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அந்த சுமார் மூஞ்சி குமார் நடிகர். ஹீரோவான அவரை திரையுலகினர் வில்லனாக பார்க்கத் துவங்கிவிட்டனர்.
Samayam Tamil gossip


அவர் வில்லனாக நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகின்றன. இதனால் அவரை வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்கள்.

இதென்னடா வம்பா போச்சு, என்னை இனி ஹீரோவாகவே நடிக்க விட மாட்டாங்க போலயே என்று நடிகர் வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து வில்லனாக நடிக்க கூடுதல் சம்பளம் கேட்டிருக்கிறார்.

அவர் கேட்டது என்னவோ ரொம்பவே கூடுதல் சம்பளம் தான். அப்படியாவது, இவ்வளவு பெரிய தொகை கொடுத்து உங்களை வில்லனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் நடையை கட்டுவார்கள் என்று நினைத்தார் நடிகர்.

ஆனால் தயாரிப்பாளர்களோ, நீங்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருகிறோம், எங்க பட வில்லன் நீங்க தான் என்று கூறி நடிகரை அதிர வைத்துவிட்டார்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்