ஆப்நகரம்

நடிகை நந்திதாவை விரட்டும் பாகுபலி கனவு!!

பாகுபலியில் ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன் என்று நடிகை நந்திதா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 16 May 2017, 4:34 pm
பாகுபலியில் ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன் என்று நடிகை நந்திதா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil  actress nanditha wants to act ramya krishan character in baahubali 2
நடிகை நந்திதாவை விரட்டும் பாகுபலி கனவு!!


நடிகை நந்திதா ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுபட்டி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வணங்காமுடி’, ‘உள்குத்து’ படங்களில் நடித்து வருகிறார் நந்திதா.

‘உள்குத்து’ படம் குறித்து நடிகை நந்திதா அளித்த பேட்டியில், ‘’உள்குத்து’ படத்தில் நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் வேலைபார்க்கும் சாதாரண பெண்ணாக நடிக்கிறேன். படப்பிடிப்பை துணிக்கடையில் நடத்தினர். அந்தக் கடையில் நான் வேலை செய்யும் பெண்ணாக நினைத்து துணி வாங்க வந்த பெண்கள்கூட்டம் என்னை யாரென்று தெரியாமல் என்னிடமே விலை கேட்டனர். மேலும் இந்தப் படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். பாலசரவணன் எனக்கு அண்ணனாக நடிக்கிறார். படத்தை கார்த்தி இயக்கி வருகிறார்.

‘பாகுபலி’யில் ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். இனி வித்தியாசமான வேடங்களில் நடிப்பேன். பிடித்த கதைகளில் மட்டும்தான் நடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவேன். திரைத்துறையிலும் ‘பார்ட்டி’களுக்கு செல்வது இல்லை” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்