ஆப்நகரம்

கௌரவ வேடத்தில் நடித்த சிம்ரன்!

பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்பு’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் நடிகை சிம்ரன்.

TOI Contributor 10 Dec 2016, 2:38 pm
பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்பு’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் நடிகை சிம்ரன்.
Samayam Tamil  actress simran has acted in the koditta idangkalai nirappu
கௌரவ வேடத்தில் நடித்த சிம்ரன்!


1992ம் ஆண்டு விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாவும், ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் இருந்தார். அப்படி இருந்தவருக்கு திருமணத்துக்குப்பிறகு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

குழந்தைக்கு தாயான் பின் நடிக்க வந்தார். பின்னர் படங்களில் கவுரவ வேடத்தில் நடிக்க மட்டுமே சான்ஸ் கிடைத்தது. ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ என்று 3 படங்களில் கவுரவ வேடத்தில் மட்டும் நடித்து வந்தார்.

இப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் சிம்ரனுக்கு கவுரவ வேடம். இது அவர் தொடர்ந்து கவுரவ வேடத்தில் நடிக்கும் 4-வது படம். அடுத்த படத்திலாவது தனித்தன்மை வாய்ந்த வேடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்