ஆப்நகரம்

‘அதே கண்கள்’ ஒரு முக்கோண காதல் கதை!

கலையரசன் ஹீரோவாக நடித்து வரும் ‘அதே கண்கள்’ ஒரு முக்கோண காதல் கதை படம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

TOI Contributor 28 Nov 2016, 1:55 pm
கலையரசன் ஹீரோவாக நடித்து வரும் ‘அதே கண்கள்’ ஒரு முக்கோண காதல் கதை படம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
Samayam Tamil  athe kankal triangle love story
‘அதே கண்கள்’ ஒரு முக்கோண காதல் கதை!


இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘அதே கண்கள்’. இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது:

“அதே கண்கள்’ ஒரு த்ரில்லர் படம். இந்தப் படத்தில் ஒரு முக்கோண காதல் கதையை சொல்லியிருக்கிறோம். படத்தின் நாயகனாக கலையரசன் கண் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு பார்வை வந்து விடுகிறது. பார்வையற்று இருக்கும்போதும் ஒரு காதல், பார்வை வந்த பிறகும் ஒரு காதல் என முக்கோண காதலில் ஆரம்பிக்கிறது படத்தின் கதை. கலையரசனுக்கு பார்வை வந்த பிறகு த்ரில்லராக மாறும் வித்தியாசமான திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகைகள் ஜனனி அய்யர் நிருபராகவும், ஷிவதா ஜவுளிக் கடையில் வேலை செய்பவராகவும் நடித்திருக்கின்றனர். பால சரணவன் காமெடியில் கலக்கியிருக்கிறார். திருக்குமரன் என்டர்டெய்ன்ட்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் அரவிந்த்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்’’ என்றார் இயக்குனர் ரோஹின்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்