ஆப்நகரம்

நடிகை ரம்பாவுக்கு ஐதராபாத் போலீசார் சம்மன்!!

தனது சகோதரர் மனைவியை கொடுமைப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஐதராபாத் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகை ரம்பாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 13 Jan 2017, 1:19 pm
தனது சகோதரர் மனைவியை கொடுமைப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஐதராபாத் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகை ரம்பாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil  hyderabad police have summoned actress ramba
நடிகை ரம்பாவுக்கு ஐதராபாத் போலீசார் சம்மன்!!


உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுரு‌ஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி, காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

ரம்பாவின் சகோதரர் வாசுவின் மனைவி பல்லவி. இவர் தனது கணவர் மீதும். ரம்பா மீதும் வரதட்சணை புகார் அளித்தார். இந்தப் புகாரை ரம்பாவும் அவரது சகோதரும் மறுத்து இருந்தனர். இந்தப் புகாரில் நீதிமன்ற உத்தரவையடுத்து, ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்பா கனடாவில் இருந்ததால், அவரிடம் போலீசார் நேரில் விசாரணை நடத்த முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத்துக்கு ரம்பா வந்தார்.

இதையறிந்த ஐதராபாத் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரம்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

hyderabad police have summoned actress ramba

அடுத்த செய்தி

டிரெண்டிங்