ஆப்நகரம்

ஹீரோயின் இமேஜை விட்டுக்கொடுக்க மாட்டேன்: நடிகை அஞ்சலி!

குத்துப் பாட்டுக்கு அழைத்ததற்கு, ஹீரோயின் இமேஜை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

TOI Contributor 3 Dec 2016, 4:03 pm
குத்துப் பாட்டுக்கு அழைத்ததற்கு, ஹீரோயின் இமேஜை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
Samayam Tamil  i never give up my heroine image anjali
ஹீரோயின் இமேஜை விட்டுக்கொடுக்க மாட்டேன்: நடிகை அஞ்சலி!


நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக நடித்து வெளியான படம் ‘இறைவி’. இந்தப் படம் மூலம் தனது திரையுலக மார்க்கெட் உயரும் என்று நினைத்திருந்தார். கடைசியில் அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. பின்னர் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களில் நடித்தார். ‘காண்பது பொய்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்தப் படங்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.

தற்போது நடிகர் ஜெய்யுடன் ‘பலூன்’ படத்திலும், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ என்ற படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இதில், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்‘ படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். மேலும், ‘சிங்கம்-2‘ படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியதை மனதில் வைத்துக் கொண்டு பல இயக்குனர்கள் அஞ்சலியை குத்துப் பாட்டுக்கு ஆட அழைக்கின்றனர். நடிகை அஞ்சலி வாய்ப்பு கேட்டு வரும் இயக்குனர்களிடம் குத்தாட்ட நடிகை என்று பெயர் எடுக்க நான் விரும்பவில்லை. மேலும் ஹீரோயின் இமேஜை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தடாலடியாக கூறிவருகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்