ஆப்நகரம்

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசை: காஜல்!

இனி வரும் காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

TNN 7 Nov 2016, 5:40 pm
இனி வரும் காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Samayam Tamil  kajal wants to act in good story based movies
கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசை: காஜல்!


தற்போது அஜீத்துக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’.ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக காஜல் அகர்வால் சென்னை வந்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ‘‘இதுவரை நான் பல படங்களில் நடித்துவிட்டேன், அதில் பெரும்பாலும் ஆடல், பாடல் என்றே இருந்தது. இனிவரும் காலகட்டங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன். நடிகைகளுக்கு பணம்தான் குறிக்கோள். அந்த குறிக்கோள் என்னிடமும் உள்ளது. அதற்காகத்தான் நாங்களும் நடிக்கிறோம்’’ என்றார்.

Kajal wants to act in good story based movies

அடுத்த செய்தி

டிரெண்டிங்