ஆப்நகரம்

அண்ணனுடன் சேர்ந்து நடிக்க கதை தேடும் கார்த்தி..!

தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க, சரியான கதையை தேடி வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

TNN 13 Apr 2017, 2:36 pm
தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க, சரியான கதையை தேடி வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil  me and anna will act together soon says actor karthi
அண்ணனுடன் சேர்ந்து நடிக்க கதை தேடும் கார்த்தி..!


சகோதரர்களாக இருந்தாலும், வித்தியாசமான நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகத்தில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. தனித்தனியே பல வெற்றிப்படங்கள் கொடுத்திருந்தாலும், இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க, சரியான கதையை தேடி வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

”நானும் அண்ணனும் இணைந்து நடிப்பது குறித்து ஏற்கனவே பல முறை பேசியிருக்கிறோம். அதற்கான சரியான கதையை தேடி வருகிறோம். இதற்கு முன்னர் இருவரும் இணைந்து நடிக்கும் வகையில் கதைகள் வந்தன. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்த கதைகள் இல்லை. தற்போதும் இருவரும் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளோம்.” என கருப்பு ராஜா வெள்ள ராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில், “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக கார்த்தி நடித்து வருகிறார்.

Me and Anna will act together soon, Says Actor Karthi

அடுத்த செய்தி

டிரெண்டிங்