ஆப்நகரம்

#MeToo நடிகை அமலா பாலுக்கு நன்றி தெரிவித்த லீனா மணிமேகலை

தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமலாபாலுக்கு கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2018, 5:45 pm
தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமலாபாலுக்கு கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 07-leena-600-jpg


சுசி கணேசன் மீதான பாலியல் புகாருக்கு, மணிமேகலைக்கு ஆதரவாக அமலாபால் சற்று முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமலாபால் கூறியதாவது: இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன்.

பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.


நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன். அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை அமலா பாலுக்கு லீனா மணிமேகலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது ’ஆதரவிற்கு நன்றி அமலாபால். திருட்டுப்பயலே 2 படப்படிப்பில் உங்களுக்கு நடந்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். #metoo குரல்களை மேலும் வலுப்படுத்துவோம். பெண்கள் படையென திரண்டு பேச முன்வந்தால் தான் பாலியல் வன்முறையற்ற உலகம் சாத்தியப்படும் ‘’ என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்