ஆப்நகரம்

பட புரமோஷனை தொகுத்து வழங்கும் ராணா மற்றும் நவ்தீப்!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘கைதி நம்பர் 150’ பட புரமோஷனை நடிகர்கள் ராணா மற்றும் நவ்தீப் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளனர்.

TOI Contributor 29 Dec 2016, 3:25 pm
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘கைதி நம்பர் 150’ பட புரமோஷனை நடிகர்கள் ராணா மற்றும் நவ்தீப் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளனர்.
Samayam Tamil  rana and navdeep will present kaithi number 150 film promotion
பட புரமோஷனை தொகுத்து வழங்கும் ராணா மற்றும் நவ்தீப்!


மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் கைதி நம்பர் 150 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 4ல் விஜயவாடாவில் கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷனை நடத்த தயாரிப்பாளர் ராம் சரண் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகின்றார். டோலிவுட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார் ராம் சரண். நிகழ்ச்சியினை ராணா மற்றும் நவ்தீப் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராணாவும், நவ்தீப்பும் ராம்சரணின் நெருங்கிய நண்பர்கள். நவ்தீப் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ராணாவும் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிவியப்பட்டவர்.

ராம் சரண் கேட்டுக் கொண்டதற்கிணங்க நவ்தீப்பும், ராணாவும் இணைந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்