ஆப்நகரம்

நடிகர் சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவில் நடவடிக்கை: விஷால் உறுதி

''நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள புகாரின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் உறுதி அளித்துள்ளார்.

TOI Contributor 13 Oct 2016, 2:36 pm
''நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள புகாரின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil  we will take action against sivakarthikeyans complaint actor vishal assured
நடிகர் சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவில் நடவடிக்கை: விஷால் உறுதி


'ரெமோ' படத்துக்கு கிடைத்து வரும் வெற்றியையடுத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "'ரெமோ' வெளியாகும் வரை எனக்கு பிரச்சினை கொடுக்கப்பட்டது. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நானும், ராஜாவும் சம்பாதிக்க படம் எடுக்கவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுத்து வருகிறோம். எங்களை வேலை செய்ய விடுங்கள்" என்று கூறி கண் கலங்கினார்.

இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பெரும்பாலான ஊடகங்களில் இந்த செய்தி இடம் பெற்று இருந்தது. சிம்பு சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு நடிகர் விஷால் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் புகாரில் பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஊழல் புகாருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்