ஆப்நகரம்

படப்பிடிப்பில் விபரீதம்: நீரில் மூழ்கி 2 கன்னட நடிகர்கள் உயிரிழப்பு

பெங்களூரு ராம்நகர் அருகே திப்பகொண்டனஹள்ளி ஏரி பகுதியில் நடந்த கன்னட பட படப்பிடிப்பின்போது 2 திரைப்பட கலைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

Bangalore Mirror Bureau 7 Nov 2016, 6:29 pm
பெங்களூரு: பெங்களூரு ராம்நகர் அருகே திப்பகொண்டனஹள்ளி ஏரி பகுதியில் நடந்த கன்னட பட படப்பிடிப்பின்போது 2 திரைப்பட கலைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Samayam Tamil 2 kannada film actors drowned while shooting climax scene
படப்பிடிப்பில் விபரீதம்: நீரில் மூழ்கி 2 கன்னட நடிகர்கள் உயிரிழப்பு


கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் 'மஸ்தி குடி' படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் திப்பகொண்டனஹள்ளி அருகே படமாக்கப்பட்டுள்ளன. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சியை படக்குழு படமாக்கிய போது இந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாயகன் துனியா விஜயுடன் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த உதய் மற்றும் அணில் ஆகியோர் சண்டையிட்டுள்ளனர். அப்போது சுமார் 100அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து துனியா விஜய், உதய் மற்றும் அணில் என மூவரும் ஏரிக்குள் குதித்துள்ளனர். இதில் விஜய் மட்டும் கரைக்கு திரும்பி வந்ததாகவும், உதய் மற்றும் அணில் நீரில் மூழ்கியதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஆபத்தான காட்சிகளை படமாக்கும் போது படக்குழுவினர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. எவ்வித முன்னோட்டமும் இல்லாமல் நேரடியாக படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது நீரில் மூழ்கிய கலைஞர்களின் உடலை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்