ஆப்நகரம்

2.0 Day 1 Collection: சர்காரின் முதல்நாள் வசூல் சாதனையை தட்டி தூக்கிய 2.0

தமிழ் சினிமா மட்டுமில்லாமால், இந்திய திரைத்துறையை இதுவரை காணாத வசூல் சாதனையை ரஜினியின் 2.0 படைத்து வருகிறது.

Samayam Tamil 30 Nov 2018, 12:54 pm
இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே அதிகவசூலை ஈட்டிய திரைப்படமாக ஆமிர்கானின் ’தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ இருந்து வரும் நிலையில், அதை ஓரம் கட்டும் விதமாக ரஜினியின் 2.0 படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்துள்ளது.
Samayam Tamil Dm4dMDjUUAAx0U4


இந்திய சினிமா உலகம் இதுவரை கண்டிராத ரூ. 543 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.



உலகளவில் இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் திரையிடப்பட்டது. திரையரங்கம் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் பலர், பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மிகவும் கொண்டாட்டத்துடன் படத்தை பார்த்தனர்.



அதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் 2.0 திரையிடப்பட்டது. அமெரிக்கா, பாகிஸ்தான், சவுதி அரேபியா உட்பட சர்வதேசளவில் பல நாடுகளிலும் இப்படம் வெளியானது. தற்போது இப்படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.



இதுவரை, வெளியான முதல்நாளிலேயே அதிக வசூலை ஈட்டிய தமிழ் படமாக ’சர்கார்’ இருந்து வந்தது. தீபாவளி அன்று வெளியான இப்படம், ரிலீஸான முதல் நாளில், சென்னையில் மட்டும் ரூ. 2.37 கோடி வசூலித்தது. தற்போது இந்த சாதனையை 2.0 முறியடித்துள்ளது.



தமிழ் சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ’2.0’ ரிலீஸான முதல்நாளில் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடியை வசூலித்துள்ளது. அதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 18.5 கோடியும், கர்நாடகாவில் ரூ. 9 கோடியும் வசூலித்துள்ளது.



இதன்மூலம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளியான முதல்நாளிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை 2.0 படைத்துள்ளது. விடுமுறை அல்லாத காலங்களில் 2.0 படம் பதிவு செய்துள்ள இந்த வசூல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.



இந்தியளவில் வெளியான முதல் நாளில் அதிக வசூல் சாதனையை பதிவு செய்த படமாக ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ இருந்து வந்தது. இப்படம் வெளியான முதல்நாளில் ரூ. 52 கோடி வசூலித்தது. ஆனால் அது தோல்வி படமாக அமைந்ததால், அதன் வசூல் நிலவரம் சரிவை சந்தித்தது.


ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் இந்தியாவில் 5000 திரையரங்குகள், சர்வதேளவில் 2000 திரையரங்குகள் என மொத்தம் 7000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் அது வெளியான 2 நாட்களில் தோல்வியை தழுவியது.

தற்போது, தமிழில் நேரடியாகவும், இந்தி மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளிவந்துள்ள ரஜினியின் 2.0, உலகம் முழுவதும் 10,5000 திரையரங்குகள் வெளிவந்துள்ளது. இந்தியப் படம் ஒன்று, அதிகளவிலான திரையரங்குகளில் வெளிவருவது இதுவே முதல் முறை. முன்னதாக பாகுபலி 2ம் பாகம் 9,000 திரையரங்குகள் வெளியிடப்பட்டது.


இதன் காரணமாக, 2.0 திரைப்படத்தின் முதல்நாள் வசூல் நிச்சயம் ’தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தானை’ வீழித்தும் என பலர் அடித்து கூறுகின்றனர். ஏற்கனவே 2.0 படத்தின் இந்தி பதிப்பு ரூ. 20 கோடியும், தமிழ் மதிப்பு ரூ. 35 கோடியும் முதல் நாள் வசூலை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2.0 படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் உலகளவில் ரூ. 85 கோடியை முதல்நாள் வசூலாக பதிவு செய்துள்ளது என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்