ஆப்நகரம்

பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர் திட்டியதால் 2 குழந்தைகள் விஷம் குடித்த சோகம்

கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லவில்லை என்று பெற்றோர்கள் கண்டித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2பேர் விஷம் குடித்தனர்

Samayam Tamil 9 Feb 2019, 7:18 pm
கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லவில்லை என்று பெற்றோர்கள் கண்டித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2பேர் விஷம் குடித்தனர்
Samayam Tamil suicide-1


கும்பகோணத்தில் மேலக்காவேரி ஜாமியா நகர் வடக்கு குடியான் தெருவை சேர்ந்த கருப்பையன் சீதாலட்சுமி ஆகியோர் மகன்கள் ஆகாஷ் எட்டாம் வகுப்பு ஹரிஷ் ஆறாம் வகுப்பு கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் படித்து வருகின்றனர் இன்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை என்று தாய் சீதாலட்சுமி கண்டித்துள்ளார்.

இருவரும் தாயை மிரட்டுவதற்காக விளையாட்டாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டனர் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துமனைக்கு இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் இருவரும் விளையாட்டாக செய்த காரியத்தினால் அப்பகுதியில் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்